அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

தலித் இலக்கியம் - புத்தக பார்வை

தமிழில் தலித் இலக்கியம்... அற்புதமான கை புத்தகம்... தலித் இலக்கியங்கள் பற்றிய பார்வையை மேலும் கூர்படுத்தும் புத்தகம்.. சில கவிதைகள்... கவிதைகளில் தோற்றமும் அமைப்பும் ஆகிய பகுதிகள் கவர்கின்றன... முகில் என்பவரின் தொகுப்பு இது...தலித் இலக்கியத்தின் தன்மைகளை அவர் கீழ் கண்டவாறு வகைபடுத்துகிறார். சாதியை எதிர்ப்பது, தலித் பிரச்சனைகளை பேசுவது, கலக இலக்கியத்தை உருவாக்குவது, கடுமையான அரசியல் எதிர்வினையை உசுப்பிவிடுவது, ஒடுக்கபட்ட நிலைமையின் ஆழமான உளவியல் உலகத்தை நோக்கி பார்வை நீள்வது, பொருளாதார சமத்துவம், தலித் விடுதலை போராட்டத்தின் வடிவம். புத்தகம் தலித யார் என்பதில் இருந்து தலித் இலக்கியம் பற்றிய விரிவான பார்வைகளோடு தொகுக்கபட்டு உள்ளது. தலித் பண்பாடு, தலித் அரசியல் மற்றும் தலித் படைப்பாளிகள் பற்றிய விவரங்களும் இடம்பெறுகின்றன.

இதில் இடம்பெற்றுள்ள சில கவிதைகள் / தெருக்கூத்து பாடல்கள் என்னை தலித் கவிதைகளை நோக்கி நேர்பார்வை கொள்ள வைக்கின்றன. உங்கள் பார்வைக்கும் சில...

காலம் மாறி போச்சுங்க
ஆண்ட மார்களே - ஒங்க
வாலக் கொஞ்சம் ஆட்டாதீங்க
ஆண்ட மார்களே..

பறையஞ் செருப்பு போட்டு வந்தா
பஞ்சாயத்து வைக்கிறிங்க - எங்க
பறச்சி கொஞ்சம் அழகாயிருந்தா
ஆண்ட மார்களே - ஒங்க
பல்லக் கொஞ்சம் காட்டுறீங்க
ஆண்ட மார்களே..

- கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், நாரையூர் கிராமத்தை சேர்ந்த தெருக்கூத்து வாத்தியார் வே.சடைமுத்து பாடும் இந்த பாட்டு மேல் சாதிகாரர்களை தார்மீக கோபத்தோடு கிண்டலடித்து குத்தி கிழிக்கிறது. இவை நிச்சயம் தலித் மக்க்ளிடையே உற்சாகத்தையும் ஆவேசத்தையும் உண்டு பண்ணும். இன்னும் ஒன்று...

நெத்தி பொட்டுல
ஒலக்கையால அடிச்சு
கறி போடுறப்பல்லாம்
ஊரிலிருந்து கிண்ணம் வரும்.
வேலையில
கொற கண்டுபிடிக்கிறப்ப மட்டும்
'மாட்டுகறி திங்கிற பசங்க' தான்னு
வசவா மாறும்.

உங்கள் விமர்ச்சனங்களை வரவேற்கிறேன்.

1 comment:

ஜானகி.இராஜா said...

அன்புத்தோழர். இந்தப் புத்தகம் குறித்தத் தகவல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.ஆதாவது, ஆசிரியர்,பதிப்பகம், ஆண்டு போன்ற விவரங்களையும் தெரிவித்தால் நலம்