அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

இருட்டில் மறையும் காமம்.

ஆன்மீகமும் பாலுணர்வும் பற்றிய ஒரு ஓஷோவின் புத்தகம் சில அற்புதமான கருத்துகளை சொல்கிறது...

" தந்திராவின் பொருள்... நீ கடந்து செல்வதற்குரிய ஒன்றாக காமத்தை பயன்படுத்தலாம் என்பதுதான். காமத்தை நீ முழுமையாக புரிந்து கொண்டு விட்டால். ஞானிகள் பேசிய பேரின்பம், எல்லையற்ற ஆனந்தம் ஆகியவைகளை நீ புரிந்து கொள்ள முடியும்..."

இந்த புத்தகம் காமம் பற்றிய சில வித்தியாசமான புரிதல்களை எனக்குள் உண்டாக்கியுள்ளது.

"தந்திரா சொல்கிறது... நீ எப்படி இருந்தாலும் உன்னை முழுமையாக ஏற்றுகொள். நீ பல பரிமாணங்களில் நிறைந்துள்ள சக்தியின் புதிர். அதை ஏற்று கொள். எல்லா சக்தியோடும் மென்மையோடு, விழிப்புணர்வோடு, அன்போடு, அறிவோடு நுழைந்து செல். அதனோடு செல். அப்போது எல்லா ஆசைகளும் அதை கடந்து செல்வதற்கான வாகனமாகிவிடும். எல்லா சக்தியும் உதவியாகிவிடும். "

"அழகற்ற விதையை நீ தூக்கி எறியும்போது, அதனுடன் சேர்ந்த அழகான மலரையும் நீ எறிந்து விடுகிறாய்... - காமம் உட்பட எதனையும் நீ போராடி வென்று விட்டால், அடக்கிவிட்டால் நீ உயிறற்றவனாகிவிடுவாய்...கோபம் இல்லாத இடத்தில் கருணை இருக்காது...காமம் இல்லாவிட்டால் அன்பும் மறைந்து விடும்..."

தந்திரா ஒரு அற்புதமான பயிற்சி... வாழ்வியல் பற்றியும் காமம் பற்றியும் நுட்பமான புரிதல்கள்...ஓஷோவின் வார்த்தைகளில் சொல்லபட்டு உள்ளன... புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கவில்லை... படித்தபின் வலைபதிவில்... சமுதாய சர்ச்சைக்கு உட்பட்ட நிறைய விஷயங்களை எழுதுவேன் என நினைக்கிறேன்...

யாராவது கொடும்பாவி எரிக்கவேண்டும் என்றால் பொம்மையும், ரேசன் மண் எண்ணையும் தீப்பெட்டியும் வாங்கி வைத்து கொள்ளுங்கள்...

No comments: