அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

நினைவுகளின் கல்லறைகள்.

கிராமத்துக்கு திரும்பி வந்த
கிழவன், ஓடைக்கரை வழியே
தன் பழைய காதலியின் புதை
குழியைத் தேடிப் போகிறான்.
ஒற்றையடிப் பாதையில் ஓர்
ஒரு மனித ஊர்வலம்.

பெரும்பாலான பயணங்களில் நான் தாண்டி போகும் இடுகாடுகளில் இந்த கவிதை பொருந்தி போகிறது. நகரவாழ்வின் சமூகத்துக்கு உட்படாத கிராம மனிதர்களின் மனம் கொள்ளும் வாழ்க்கையை இந்த கவிதை சொல்வதாக உணர்கிறேன். உடலுக்கு ஒவ்வாமல் மனதையும், மனதுக்கு ஒவ்வாமல் உடலையும் செலுத்தி கொண்டு நாம் இருப்பதாக வைரமுத்து சொல்லியிருப்பது நிஜம். இந்த கவிதை மனதை மனதோடு செலுத்திய ஒரு ஆன்மாவின் பயணம்.

No comments: