அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

வார்த்தைகளிலும் சிவப்பு...

சிங்கம் பேசி பார்த்திருக்கிறீர்களா.. ஜெயகாந்தனை பேசவிடுங்கள்... கர்ஜனையின் அர்த்தம் புரியும்... சென்ற வார ஆனந்தவிகடனின் ஒரு பேட்டி... பதில்களில் இன்னும் கிழட்டு சிங்கத்தின் கோபம்...

என்னை கவர்ந்த சில பதில்கள்... இவை பற்றிய விவாதங்கள் இனி வரும் பதிவுகளில்...

"கருத்து சொல்கிறவன் விமர்ச்சனங்களை மனதில் வைத்து கொண்டு சொல்வதில்லை...ஏனெனில் கருத்தே ஒரு விமர்ச்சனம்தான்..."

"எதை வழிபடுகிறாயோ அதுதான் இறை! வழிபட ஆரம்பித்த பின் மனிதன் என்ன..? இறைவன் என்ன..? பெரியாரை வழிபட்டால் பெரியார் கடவுள். பகுத்தறிவை வழிபட்டால் அது கடவுள். எதையாவது ஒன்றை வழிப்படுங்கள். "வழிபடுதல்" என்றால் பின்பற்றுதல் என்று பொருள். கடவுளை கூட சரியாக வழிபடாமல் போனதுதான் நமது பிரச்சனை. எதை வழிபட்டாலும் உண்மையாக வழிபடுங்கள்..."

"மாற்றங்களால்தான் உலகம் தன் சுவரஸ்யத்தை இழக்காமல் இருக்கிறது...பபிள்கம் வாங்கும் பணத்தில் கூட இப்போது பத்திரிக்கைகள் கிடைக்கின்றன. ஆனால், தனி நபர்களின் போக்கில் மூக்கை நுழைக்கிற போக்கு அதிகரித்து இருப்பது கசப்பாக இருக்கிறது. எனக்கான முடிவுகளை வேறு யார் யாரோ எடுக்கிறார்கள். அது நன்மையாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் என் முடிவுகளை வேறு யாரோ எடுக்க முடியாது - எடுக்கவும் கூடாது. "

"மனுஷன் என்றால் எல்லாம் இருக்கும். யாருக்கு இல்லை இங்கே கர்வம் ஆணவம்.? ஏன் உங்களுக்கு இல்லையா..? இருப்பதால்தானே எனக்கு அகங்காரம் அதிகம் என என்னிடமே சொல்கிறீர்கள். அடுத்தவர்களுக்காக என்னால் வாழ முடியாது. நான் எனக்காகவே வாழ்கிறேன். நீங்களும் உங்களுக்காகவே வாழுங்கள்..."

No comments: