அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, April 25, 2009

அலட்சியம்...

இந்த தேர்தல்ல எத்தனை பேர் ஓட்டு போட போறாங்க..!! அதுவும் முக்கிய வேலை நிமித்தமா வெளியூருல இருக்குற தோழர்கள் மற்றும் தோழமைகள்..!! 1 நாள் லீவு சரி.. ஆனா அந்த ஒரு நாள் சொந்த ஊருக்கு போய் - அல்லது ஓட்டு இருக்குற ஊருக்கு போய் ஓட்டு போட முடியுமா..!! எத்தனை வெளி இடங்களில் வேலை செய்யும் நண்பர்கள்.. எத்தனை மாணவ மாணவிகள்..!! அத்தனை பேரும் நிச்சயம் ஓட்டு போட போவதில்லை. சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற இடங்களில் வேலை செய்யும் கடை பசங்கள் முதல்கொண்டு இந்த முறையை தங்கள் ஜனநாயக கடமையை செய்ய போவதில்லை. இணையத்தில் தேடியதில் - தபால் ஓட்டு தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானாம்..!! மற்றபடி நமக்கு கிடையாது..!! நாம் தற்போது இருக்கும் இடத்துக்கு ஓட்டு உரிமையை மாற்றி கொள்ள வசதி இருக்கிறதாம் - இது இப்போதுதான் தெரியும்..!! இதனை பற்றி எந்த விளம்பரமும் செய்யபடிவில்லை - நான் பார்த்த பத்திரிக்கை மற்றும் டெலிவிஷன் சேனல்களில். ஓட்டு போட சொல்லி சில விளம்பரங்கள் பார்த்திருக்கிறேன்..!! கடந்த 10 வருடங்களில் இந்திய வேலை வாய்ப்பு என்பது எந்த இடத்துக்கும் இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்பது குழந்தை கூட அறிந்ததே.!! அப்படி இருக்க...இவர்களுக்கு இத்தகைய முக்கியமான விஷயத்தை பற்றி எந்தவித அறிவுறுத்தலும் எந்த முறையிலும் கொடுக்கபடாதது ஏன்..! அலட்சியம் எனவும் கொள்ளலாம் ..! நமக்கும் கேட்டு தெரிந்து கொள்ள தோன்றவில்லை - அரசாங்கமும் தனியாரும் கவனிக்கவில்லை.!! மொத்தத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இழப்பு மக்களாகிய நமக்குதான்..!!

Thursday, April 23, 2009

சும்ம்மா அதிருதில்லா..!!

அப்பாடா.. ஒரு வழியாக "தமிழின துரோகி" என்ற பட்டத்தை ஏற்று கொள்ளாமல் இருக்க ஒரு வேலை நிறுத்த நாடகத்தை நடத்தியாகிவிட்டது. சும்மா மிரட்டிடோமில்ல..!! இலங்கை அரசாங்கம் பயந்து போய் ராஜபக்சேவுக்கு வேப்பிலை அடிச்சுட்டு இருக்காங்கலாம்..!! நாம எல்லாம் சிங்கமுல்லா..!! இங்க வேலைக்கு போகாம உட்கார்ந்து - லேட்டா படுக்கைல இருந்து எந்திருச்சு (நேத்தி ராத்திரி தண்ணி மப்பு தெளிய வேணாமா..!! ) கலைஞர் டிவில போட்ட எல்லா சினிமாவும் பார்த்துட்டு.. வூட்டுல தூங்கி எந்திரிச்சு .. எத்தன பெரிய போராட்டம்.. சும்ம்மா அதிருதில்லா..!! அட .. இன்னும் சில பேரு.. அப்பிடியே மொட்ட மாடில நின்னு.. இலங்கை இருக்கிற திசை பார்த்து ஒரு கண்ணு சிவக்க முறைச்சதுல.. அங்க கடல் எல்லாம் அலையோ அலையாம்.. ஸ்வீடனும், நார்வேவும்.. இன்னும் பல நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்துன நடவடிக்கைகளை விட... நாம நடத்துன வேலை நிறுத்த போராட்டதோட விளைவு..!! (இதுல கலந்துக்க மாட்டோம்னு ஒரு அரசியல் கட்சியோட - அரசியல் நாடகம் வேற..!!) இலங்கைல போர் நிறுத்தம் அறிவிச்சுடாங்களாம்..!! அங்க புதிய வானம் புதிய பூமினு .. பூக்கள் பூக்குதாம்.. காயம் பட்டவங்க எல்லாம் முழு ஆரோக்கியத்தோட இருக்கிறாங்களாம்.. செத்தவங்க கூட எந்திரிச்சுடாங்கலாம்..!! அப்புறம் இலங்கை அரசாங்கம் நம்ம அரசியல் சிங்களோட தாக்குதல் தாங்க முடியாம மண்டி போட்டு..****** !! அட.. விடுங்கப்பூ..!! இன்னும் இருக்கு விளையாட்டு..!! நாமதான் ஓட்டு போடற ஆடுக..(நிஜம்மா ஆளுக கிடையாது.. ஆடுகதான்..!!) நாம பாக்காட்டி யாரு பாப்பா இந்த ஆட்டமெல்லாம்..!!

Sunday, April 19, 2009

விதிசெவி இரண்டும்...

6 மாதங்கள் முன்பு வரை நானும் மொபைல் போனில் அதிக நேரம் பேசி கொண்டுதான் இருந்தேன். யாரேனும் ஒருவர் ஏதாவது காரணத்துகாக கூப்பிடுவதுண்டு - நானும் பலரை அழைப்பதுண்டு. சில நேரம் அலுவலக பணிகள் - பல நேரம் நண்பர்கள்... அப்புறம் ஒருநாள் வந்தது அந்த காது வலி... முதலில் "LG 2500- ." ஒரு சிறிய வகை மொபைல் உபயோகபடுத்தும் போது அதிகம் காது வலி வந்ததில்லை. அதனை கிட்டதட்ட 2 வருடம் உபயோகபடுத்தினேன்.. பின்னர் ஒரு "Nokia 6233" .. சில நேரம் இயர்-போன் உபயோகபடுத்தினாலும் பல நேரம் நேரடியாக காதில் வைத்து பேசுவதுண்டு.. காது வலி என்பது காது, தொண்டை மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற வலி... பின்னர் இயர்-போன் போட்டு பாட்டு கேட்டாலும் வலிக்க ஆரம்பித்தது. பர்கிட் ரோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவரை சந்தித்தோம் நானும் நண்பரும். சில நிமிட பரிசோதனைகளுக்கு பிறகு அவர் சொன்ன ஒரே மருந்து - "மொபைல் போனில் பேசாதீர்கள் - அப்படி அவசியம் பேச வேண்டும் என்றால் ஸ்பீக்கர்போனில் பேசலாம் - நேரடியாக காதில் வைத்து பேச வேண்டிய விஷயம் என்றால் குறைந்த நேரத்தில் பேசி முடிப்பது நல்லது. மொபைல் போனில் பேசுவதை விட - வாய்ப்பு இருந்தால் டெலிபோனில் பேசுவது நல்லது... " - இவற்றை கடைபிடிக்க தவறினால் பின்னர் பிரச்சனைகள் பெரியதாகலாம் - காது முழுவதும் கேட்காமல் போகலாம் - அதீத தலைவலி வரலாம் - Etc, Etc... அவர் சொன்ன ஆலோசனைகளை கடைபிடிக்க ஆரம்பித்த பின்னர் காது வலி வருவதில்லை.. இன்றைய சூழ்நிலையில் நிறைய பேரை சாலையில் FBI ஏஜெண்ட் போல காதில் இயர் போனோடுதான் பார்க்கிறேன். நிறையபேர் பேசிகொண்டு போகிறார்கள்..(பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது - யார் பெற்ற பிள்ளையோ..!!) இன்னும் பலர் FM அல்லது MP3 பாட்டு (அப்படி என்ன இசை ஆர்வமோ தெரியவில்லை..!!) .. இன்றைய மொபைல் போன்கள் அவற்றின் அடிப்பவை பயன்பாடு தாண்டி நிறைய வசதிகளை வழங்குகின்றன.. ஆனால் தரம் இறங்கிவிட்டது. மொபைல் போனில் ஸ்பீக்கர் சத்தம் - எல்லா "Mode"களிலும் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று ஒரு கணக்கு விகிதம் உண்டு. ஆனால் எந்த மலிவு விலை (சைனா , கொரியா மொபைல் போன்கள் - மலிவு விலையில் பர்மா பஜாரிலும், சத்யா பஜாரிலும் விற்க்கபடுவதுண்டு) மொபைல்போனிலும் இவை கடைபிடிக்கபடுவதில்லை. "Nokia" "LG" "Samsung" போன்ற முண்ணனி நிறுவனங்கள் கூட ஸ்டைலுக்காக அறிமுகபடுத்தியுள்ள எந்த மொபைல் போனிலும் விதி மீறல் உள்ளதை மறுத்ததில்லை. நெடுநேரம் காதில் வைத்து பேசுவது, இயர்-போனில் பேசுவது, இயர்-போனில் பாட்டு கேட்பது, ஐ-பாடில் பாட்டு கேட்பது - எல்லாம் மெல்ல மெல்ல செவித்திறனை குறைத்து, காதில் வலி, தலை வலி ஆகியவற்றை கொண்டு வருகிறது. சின்ன சின்ன தினப்பேச்சுகளை முடிந்தவரை இண்டர்காமில் பேசலாம். அல்லது எழுந்து போய் பார்த்து பேசிவிட்டு வரலாம் (ஒரே கட்டிடத்தின் இரு வேறு பகுதிகள் என்றால்). நண்பர்களுடன் பேச நேரம் அமைத்து கொண்டு (அவர்களையும் வேலைக்கு மத்தியில் தொந்தரவு செய்யாமல் இருந்தது போல இருக்கும்) வீட்டில் உட்கார்ந்து ஸ்பீக்கர் போனில் நிம்மதியாக பேசலாம். வெகு அவசியமாக அழைப்புகளை குறைந்த நேரத்தில் பேசி முடிக்கலாம். பாட்டு கேட்க அமைதியான சூழ்நிலை வேண்டும்.. வீட்டில் ஸ்பீக்கர் போனிலோ அல்லது MP3 பிளேயரிலோ பாட்டு கேட்கலாம்.. முடிந்தவரை இயர் போன் உபயோகபடுத்துவதையும், காதில் போனை நேரடியாக வைத்து பேசுவதையும் தவிர்க்கலாம். உலகம் எல்லாம் ஒரு விழிப்புணர்வு பெருகிவருகிறது இந்த விஷயத்தில். விதிசெவி இரண்டும் வேலவர் காக்க - என்று சாமி கும்பிட்டு கொண்டு இருக்காமல் நாம் கொஞ்சம் புத்திசாலிதனமாக இருந்தால் - நமக்குதான் நல்லது.

Wednesday, April 15, 2009

கடவுள் வழிபாடு எனும் குழப்பம்

சென்ற வார இறுதியில் சனிக்கிழமை வெங்கடநாராயணா சாலையில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. மாமனார், மாமியாருடன், ரேவதியும் நானும் சென்றோம். நல்ல கூட்டம் - வழக்கம் போல. கோவில்களில் உள்ள கூட்டத்தை பற்றியும் இந்து வழிபாடு முறை பற்றியும் ரேவதிக்கு காட்டமான கருத்துகள் நிறைய உண்டு. என் கருத்துகளை அவற்றில் கோபமும் கேள்விகளும் இருக்கும். "கடவுள் என்பது என்ன" போன்ற பொருள்முதல் வாத தத்துவ புத்தகங்களை படிக்கும் பெண்.. கேள்விகளும் அப்படித்தான் இருக்கும். அது என்ன - எந்த கடவுளுக்கும் இல்லாத கூட்டம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் ..!! "காசு வேண்டும்" என்ற மனம்தான் காரணம் என்றேன் நான்..!! மற்ற கடவுள் எல்லாம் - பொருளாதார அளவில் பெரிய அளவில் பிரபலபடுத்தபடவில்லையே - அங்கெல்லாம் - கல்வி, உடல் ஆரோக்கியம் மற்றும் பல விஷயங்கள்கள்தான் பிராத்தைனை விஷயங்கள் ஆகிறது போல. அதுவும் தவிர - இந்த மாதம் இந்த சாமி, அடுத்த மாதம் வேறு சாமி கும்பிடு என்று பிரபலபடுத்தும் ஆன்மீக புத்தகங்கள் வேறு.. !! ஒரு சாமியை விட அடுத்த சாமி பெரிது என்று ஒரு பிம்பம் காட்டுகிறார்கள் - ஆனால் கடவுள் ஒன்று என்றும் குழப்புகிறார்கள்.. !! யாரும் - "நல்ல மனம் வேண்டும்" என்று கும்பிடுவதாக தெரியவில்லை - பொதுவாக சொல்லவில்லை - நிறைய பேர் காசு மினுமினுக்கதான் கோவிலுக்கே வருகிறார்கள். ஒரு சட்டை, வேட்டி அல்லது பேண்ட், புடவை, சுடிதார் போதாதா கோவிலுக்கு வர - ஒரு பேசன் பேரேடே நடக்கிறது பல நேரங்களில்..!! சரி.. இது எல்லாம் அவரவர் சொந்த விஷயம் - தலையிட கூடாது.. கோவிலில் அதிகாரம் எதற்கு... தனி வரிசை எதற்கு ..!! காசு கொடுத்தால் பக்கத்தில் சாமி பார்க்கும் வசதி எதற்கு.. அப்படி நிற்பவருக்கு மட்டும் மாலை மரியாதை எதற்கு.. காசு கொடுக்காவிட்டால் சில கோவிலில் விபூதி கூட தூக்கித்தான் வீசுகிறார்கள் சில கோவிலில்.. தென் தமிழ் நாட்டின் சில கோவில்களில் கேட்டால் சில தலபுராணங்களையும், பாடல் பெற்ற விஷயங்களையும் சொல்கிறார்கள்.. அப்படி சொல்லும் கோவில்கள் எத்தனை இருக்கின்றன.. எத்தனை பேருக்கு விஷயம் தெரியும்.. கட்டின ராஜா யார் என்று கூட தெரியாது.. முகம் தெரியாத சிற்பிகளின் உழைப்பு தெரியாது..!! ஆன்மீக கலாச்சாரம் என்று ஒரு மாயை இருக்கிறது. கடவுள் மறுப்பு என்பது வேறு - கேள்வி கேட்பது என்பது வேறு..!! எதனையும் கொஞ்சம் கேள்வி கேட்டால்தான் எல்லாமே ஒரு வழிமுறைக்கு வரும் என்பது ஒத்துகொள்ளகூடிய கருத்து..!!

Tuesday, April 14, 2009

கலைவாணர் - ஒரு சகாப்தம்

இத்தனை நாளாக இருந்திருக்கிறது - நான் கவனித்ததே இல்லை. சும்மா யாரோ ஒருவரின் சிலை எனத்தான் நினைத்திருந்தேன். நேற்று ஒரு நடை அந்த பக்கம் நடந்த போதுதான், ஜி.என். செட்டி சாலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஒரு சிலை இருப்பதே தெரியும். நான் ஒன்றும் சென்னைகாரன் கிடையாது - ஜி.என். செட்டி சாலையும் அவ்வளவு பழக்கம் கிடையாது. எனவே கவனிக்காமல் இருந்ததில் பெரிய விஷயமும் இல்லை - எனினும் கண்டு கொண்டவுடன் நிஜமாகவே ஒரு நல்ல உணர்வு இருந்தது. கொஞ்சம் நேரம் சிலை முன்னால் இருந்து நானும் ரேவதியும் பேசி கொண்டு இருந்தோம். பேச்சு பெரும்பாலும் என்.எஸ்.கே வின் காலத்தை வென்ற நகைச்சுவை பற்றியே இருந்தது. நல்ல முற்போக்கு பார்வையும், யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையும், நையாண்டி என்று சொல்லபடும் பாணியிலான விமர்ச்சனங்களும், விஞ்ஞான நம்பிக்கையும், சுயமரியாதை தத்துவங்களும் கொண்ட அவர் - தன் காலத்து திரைப்படங்களில் சொன்ன கருத்துக்கள் நிச்சயம் வெகுவாரியான கண்டனங்களை எதிர்கொண்டிருக்கும். நிஜவாழ்வில் அவர் எப்படிபட்டவர் என்பது பற்றி இருவேறு கருத்துகளை நான் கேட்டிருக்கிறேன் - எனினும், திரைவாழ்வில் ஒரு சகாப்தமாகவே இருந்திருக்கிறார். இன்றைய நகைச்சுவை "பாத்திர" நடிகர்கள் கற்று கொள்ள நிறைய சொல்லியிருக்கிறார்- யாரும் கவனிப்பாரில்லை. கலைவாணரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. 12.4.2009ல் ஒரு விழா நடந்திருக்கிறது - கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் மூலமாக. "கலைவாணர் - ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் மூத்த வில்லுபாட்டு கலைஞர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆங்கில "Classic" நகைச்சுவை தொகுப்பு போல ஏதாவது கலைவாணருக்கு இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். நிச்சயம் வாங்கலாம்.

Thursday, April 02, 2009

49 ஓ...

காலை ஒரு மின்னஞ்சல் வந்தது - ஞானி எழுதிய ஒரு பதிவை இணைய குழுமத்துக்கு அறிமுகபடுத்தி. அந்த பதிவு "49 ஓ" என்ற சட்டம் பற்றி. நடைமுறை அரசியல் கேவலங்களால் மனம்வெதும்பும் பொதுமக்கள் யாரையும் என் தொகுதியில் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்பதை - சட்ட ரீதியாக - பதிவு செய்யலாம். எல்லா அரசியல் கழுதைகளையும் நிராகரிக்க இது சிறந்த வழி. இதன் முறையை ஞானி இவ்வாறாக விளக்குகிறார்.

"வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்ப்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்ல; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல வெண்டும் உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இது தான் 49ஓவை பதிவு செய்யும் முறை. இதை செய்ய கூடாது என்று நம்மை யாரும் - சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்க்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.ஏற்கனவே நரேஷ் குப்தா, தேர்தல் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 49 ஓ பற்றியும் எடுத்துச் சொல்ல சென்ற தேர்தலின்போதே உத்தரவிட்டிருக்கிறார். அதனால் எந்த தேர்தல் ஊழியரும் இது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. தவிர, இந்த முறை சமூக ஆர்வலர் அ.கி. வேங்கடசுப்பிரமணியன் தேர்தல் ஆணயத்திடம் கொடுத்த மனுவின் பேரில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 49 ஓ பிரிவு பற்றிய சுவரொட்டியும் இடம் பெற இருக்கிறது".

மேலும் விவரங்கள்:
http://en.wikipedia.org/wiki/49-O

அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய உரிமை இருப்பது போலவே, வாக்காளர்களாகிய நமக்கும் 49ஓ என்ற சட்டபூர்வமான உரிமை பற்றி பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது.என்ன செய்தாலும் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆடும் அரசியல்வாதிகளுக்கு ஆணி அடிக்க... ஒன்றுபடுவோம் தோழர்களே..!!

புதிய நிதியாண்டு வாழ்த்துக்கள்...

நேற்று வந்த ஒரு குறும்செய்தி - "இனிய புது நிதியாண்டு வாழ்த்துகள்" என்றது. அட இதுக்கும் கூட குறும்செய்தியா என்று முதலில் எண்ணினாலும், பின்னர் அதன் முக்கியதுவத்தை அனுப்பியவர் விவரித்தார். (அவர் ஒரு நிதி அமைப்பு சார்ந்த உறுப்பினர் என்பது கொசுறு செய்தி)... எந்த முறையும் இல்லாதது போல இந்த முறை கடுமையான பொருளாதார குழப்பத்தில் நிதியாண்டு பிறந்துள்ளது. கணிப்பொறி சார்ந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், கணிப்பொறி துறையை உபயோகபடுத்தி கொள்ளும் துறைகளும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. வீட்டு கடன் முதல்கொண்டு எல்லா வகையிலும் கடன் சுமை ஏறியுள்ளது... சென்செக்ஸ் ஏறியுள்ளது என்றாலும் - நெருக்கடி நிலையை பார்த்து பார்த்து - எப்போது பிரச்சனை வரும் என்ற பயமும் உள்ளது. சத்யம் நிறுவன நெருக்கடிக்கு பிறகு எந்த நிறுவனம் எப்போது விற்க்கபடுமோ, யாரால் வாங்கப்படுமோ என்ற பயமும் இருக்கிறது. புதிய நிறுவனம் வாங்கியபிறகு - அதன் சட்டதிட்டங்கள் எப்படி இருக்குமோ என்ற பயமும் கூட. அடுத்த மாதம் சம்பளம் வருமா..!! இந்த மாதமே ஆள்குறைப்பு தீவிரப்படுமா.. என்ற பயங்கள் வேறு.. நிம்மதியாக சினிமா, உணவு விடுதி போகவும் விடாமல் - கையில் இருக்கும் காசை பத்திரப்படுத்த பிரயாசைகள்..!! போன மாதம்தான் - வரி என்ற பெயரில் சம்பளமே 4 இலக்கத்தில் வந்திருக்க, கோடை தொடங்கும் காலம் - எல்லா வகையிலும் செலவு வைக்குமே..!! இப்படி பல கவலைகள் நிதி சார்ந்து இருப்பதால் - வாழ்த்துகள் + பிராத்தனைகள் மிகவும் அவசியமாக இருக்கிறது என்கிறார் அவர். அதுவும் சரிதான்...!!