அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, April 14, 2009

கலைவாணர் - ஒரு சகாப்தம்

இத்தனை நாளாக இருந்திருக்கிறது - நான் கவனித்ததே இல்லை. சும்மா யாரோ ஒருவரின் சிலை எனத்தான் நினைத்திருந்தேன். நேற்று ஒரு நடை அந்த பக்கம் நடந்த போதுதான், ஜி.என். செட்டி சாலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஒரு சிலை இருப்பதே தெரியும். நான் ஒன்றும் சென்னைகாரன் கிடையாது - ஜி.என். செட்டி சாலையும் அவ்வளவு பழக்கம் கிடையாது. எனவே கவனிக்காமல் இருந்ததில் பெரிய விஷயமும் இல்லை - எனினும் கண்டு கொண்டவுடன் நிஜமாகவே ஒரு நல்ல உணர்வு இருந்தது. கொஞ்சம் நேரம் சிலை முன்னால் இருந்து நானும் ரேவதியும் பேசி கொண்டு இருந்தோம். பேச்சு பெரும்பாலும் என்.எஸ்.கே வின் காலத்தை வென்ற நகைச்சுவை பற்றியே இருந்தது. நல்ல முற்போக்கு பார்வையும், யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையும், நையாண்டி என்று சொல்லபடும் பாணியிலான விமர்ச்சனங்களும், விஞ்ஞான நம்பிக்கையும், சுயமரியாதை தத்துவங்களும் கொண்ட அவர் - தன் காலத்து திரைப்படங்களில் சொன்ன கருத்துக்கள் நிச்சயம் வெகுவாரியான கண்டனங்களை எதிர்கொண்டிருக்கும். நிஜவாழ்வில் அவர் எப்படிபட்டவர் என்பது பற்றி இருவேறு கருத்துகளை நான் கேட்டிருக்கிறேன் - எனினும், திரைவாழ்வில் ஒரு சகாப்தமாகவே இருந்திருக்கிறார். இன்றைய நகைச்சுவை "பாத்திர" நடிகர்கள் கற்று கொள்ள நிறைய சொல்லியிருக்கிறார்- யாரும் கவனிப்பாரில்லை. கலைவாணரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. 12.4.2009ல் ஒரு விழா நடந்திருக்கிறது - கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் மூலமாக. "கலைவாணர் - ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் மூத்த வில்லுபாட்டு கலைஞர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆங்கில "Classic" நகைச்சுவை தொகுப்பு போல ஏதாவது கலைவாணருக்கு இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். நிச்சயம் வாங்கலாம்.

No comments: