அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, April 25, 2009

அலட்சியம்...

இந்த தேர்தல்ல எத்தனை பேர் ஓட்டு போட போறாங்க..!! அதுவும் முக்கிய வேலை நிமித்தமா வெளியூருல இருக்குற தோழர்கள் மற்றும் தோழமைகள்..!! 1 நாள் லீவு சரி.. ஆனா அந்த ஒரு நாள் சொந்த ஊருக்கு போய் - அல்லது ஓட்டு இருக்குற ஊருக்கு போய் ஓட்டு போட முடியுமா..!! எத்தனை வெளி இடங்களில் வேலை செய்யும் நண்பர்கள்.. எத்தனை மாணவ மாணவிகள்..!! அத்தனை பேரும் நிச்சயம் ஓட்டு போட போவதில்லை. சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற இடங்களில் வேலை செய்யும் கடை பசங்கள் முதல்கொண்டு இந்த முறையை தங்கள் ஜனநாயக கடமையை செய்ய போவதில்லை. இணையத்தில் தேடியதில் - தபால் ஓட்டு தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானாம்..!! மற்றபடி நமக்கு கிடையாது..!! நாம் தற்போது இருக்கும் இடத்துக்கு ஓட்டு உரிமையை மாற்றி கொள்ள வசதி இருக்கிறதாம் - இது இப்போதுதான் தெரியும்..!! இதனை பற்றி எந்த விளம்பரமும் செய்யபடிவில்லை - நான் பார்த்த பத்திரிக்கை மற்றும் டெலிவிஷன் சேனல்களில். ஓட்டு போட சொல்லி சில விளம்பரங்கள் பார்த்திருக்கிறேன்..!! கடந்த 10 வருடங்களில் இந்திய வேலை வாய்ப்பு என்பது எந்த இடத்துக்கும் இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்பது குழந்தை கூட அறிந்ததே.!! அப்படி இருக்க...இவர்களுக்கு இத்தகைய முக்கியமான விஷயத்தை பற்றி எந்தவித அறிவுறுத்தலும் எந்த முறையிலும் கொடுக்கபடாதது ஏன்..! அலட்சியம் எனவும் கொள்ளலாம் ..! நமக்கும் கேட்டு தெரிந்து கொள்ள தோன்றவில்லை - அரசாங்கமும் தனியாரும் கவனிக்கவில்லை.!! மொத்தத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இழப்பு மக்களாகிய நமக்குதான்..!!

No comments: