அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, May 31, 2010

புகையாய் கலையும் அரசியல்.

ஆரம்பத்திலிருந்தே புகை பிடித்தல் மேல் ஒரு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அப்பா கொஞ்சம் அதிகமாகவே ஊதுவதால் - அந்த வாசத்தின் மேல், ஒரு ஈர்ப்பு இருந்தது எனினும், பள்ளி இறுதியில் முயற்சி செய்து, ரொம்ப இருமியதால் ஆர்வம் முழுவதுமாக போய்விட்டது. புகைபிடித்தல் ஒரு வகையான ஆண்மையின் அடையாளமாகவே மாணவபருவத்தில் கருதியதுண்டு..!! பல நண்பர்கள் பள்ளி இறுதியில்தான் முதல் முறை புகை பழக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். அப்பா முன்பெல்லாம் வாரத்துக்கு 10 பெட்டி வாங்குவார். கல்லூரி காலங்களில்தான் பல ரகம் இருப்பதே தெரியும். உற்சாகபானம் பழகியும் புகை பழகாமல் இருப்பவர்கள் அதிகம். இன்று பெண்கள் கூட புகைக்கிறார்கள். தனி பிராண்ட் எல்லாம் இருக்கிறது.

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாம்..!! சிகரெட் விற்க போவதில்லை என போலி அரசியல் செய்தியில் கூட வந்தாகிவிட்டது. மருத்தவர் ஐயா எதிர்த்து எதிர்த்து இப்போதெல்லாம் ஒரு "எச்சரிக்கை" செய்தி போட்டுதான் புகை பிடிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வருகின்றன..!! இப்படி எல்லாம் விழிப்புணர்வு செய்து நிறுத்த கூட விஷயமில்லை இது - ஜனவரி 1 அல்லது பிறந்த நாட்களில் புகை விட்டு விடுவது பற்றி சத்தியம் செய்தவர்களை கணக்கு போட்டால், அது மக்கள் தொகையில் பாதியை தாண்டும்.

என்னமோ..!! எல்லாரும் சொல்வதால் நானும் சொல்கிறேன்..! புகைபிடிப்பதை விட்டு விடுங்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒரு ஞாயிற்றி கிழமை மதியம் - புகை பிடிப்பதால் உண்டாகும் உடல் நிலை கெடுதல் பற்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சி பாருங்கள்.. ஒருவேளை திங்கள்கிழமையில் இருந்து புகை விடுவதை நீங்கள் நிறுத்திவிடலாம்.

எல்லாம் சரி. விற்பனை கட்டுப்படுத்தாமல் உபயோகபடுத்துபவர்களை உசுப்புவது என்ன அரசியல் தந்திரமோ தெரியவில்லை.!! மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டால், புகையிலையால் கிடைக்கும் பொருளாதாரத்தை விட்டு கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.. என்ன செய்வது.. நமக்கு புரிவது அவ்வளவுதான்..