அறிமுகம்...

My Photo
Muthu kumar Gopala Krishnan
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
View my complete profile

Wednesday, November 11, 2009

திஸ்ஸும் தேட்டும் பின்னர் ஆலும்…

காந்தியும், சுபாஷும் மற்றும் பலரும் கஷ்டபட்டிருக்கவே தேவையில்லை 1947ல். சுதந்திரம் என்ன - அவன் தேசத்தையை பிடித்திருப்போம் நாம் - இன்னும் கொஞ்சம் காலம் அவன் நம் நாட்டில் இருந்திருந்து - நம் மக்களின் ஆங்கிலத்தை காதால் கேட்டால் - ஒன்று ஓடி போயிருப்பார்கள் அல்லது கூண்டோடு தற்கொலை. இது வரை சின்னதிரை தொகுப்பாளிகளை மட்டுமே மோசமான தமிழுக்கு உதாரணமாக கொண்டிருந்தோம் (தமிழன் தொலைகாட்சி தவிர). இனி மோசமான ஆங்கிலத்துக்கு நம் கணிப்பொறி வல்லுனர்களை சொல்லலாம் என்பது போல எனக்கு அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. என்னை இப்படி சொல்ல வைத்த விஷயங்கள் இவை -

1. இவர்கள் இவர்களின் தாய்மொழி போல ஆங்கிலத்தை பேசுகிறார்கள் - அவ்வளவு லாவகமாக இல்லை - அதே தொனியில். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் - தெலுங்கு அல்லது கன்னட அல்லது தமிழின் உச்சரிப்பின் தொனியில் ஆங்கிலம் இருந்தால்..!!
2. ஆங்கில எழுத்தும் குறுஞ்செய்தி பாணியில் இருக்கிறது - அடிப்படை இலக்கணமே இல்லை. அதுவும் அலுவல் சம்பந்தமான மின்னஞ்சல்களில் கூட.
3. தேவையில்லாத இடங்களில் ஆங்கிலம் பேசும் "வெட்டி" பந்தா.
4. மொழி புரிகிறதோ புரியவில்லையோ - எல்லாத்துக்கும் தலையாட்டி - வீண் பிரச்சனைகளுக்குள் சிக்கி கொள்வது.
5. ரொம்ப சத்தமாக - (அதுவும் ராகம் போட்டு) கைபேசியில் ஆங்கிலம் பேசுவது..

என்ன சொல்ல..!! இப்படிதான் இருக்கிறார்கள். எந்த மொழியையும் கொலை செய்யகூடாது என்பது என் கருத்து - கற்று கொள்ளலாம் அல்லது தெரியாத மொழியின் பிரயோகத்தை குறைத்து கொள்ளலாம். ரொம்ப தேவையெனில் முறையாக கற்று கொள்ளுதல் குற்றமில்லையே. அதை விட்டு - சுற்றி இருப்பவரை எல்லாம் வெறி ஏற்ற கூடாது. எல்லாரும் ஆங்கிலத்தில் மெத்த புலமையோடு இருப்பது கிடையாது - நம் கல்வி அமைப்பு அதற்கு வித்திடுதலும் கிடையாது. அத்தனை எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது. இருந்தும் மொழி என்பதனை சரியாக அறிந்து கொள்ளுதலில் என்ன பிரச்சனை இருந்து விட முடியும். எனக்கு வாய்ப்புகள் சரியாக இல்லை என சொல்லிவிட முடியாது - கணிப்பொறிதுறை ஆங்கில மொழி ஆளுமை அதிகம் - கற்று கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். இது வெறும் குற்றச்சாட்டு அல்ல - ஒரு ஆதங்கம். இவர்களுன் முன்னேற்றம் சரியாக அமையாமல் போய்விடும் என்ற ஆதங்கம். சுயநல அடிப்படையில் சொல்வதானால் - இவர்களை நம்பி வேலை கொடுத்து அது இவர்களின் பேச்சால் கெட்டுபோய்விடும் அபாயத்தை சொல்லலாம். என்னால் முடிந்தவரை என் குழுவினருக்கு சரியான முறையில் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் உதவி வருகிறேன். அலுவல் சார்ந்த தொலைபேசி பேச்சு வார்த்தைகளுக்கும் மின்னஞ்சல்களுக்குமாவது அது உதவுகிறது என்பது தெரிகிறது. மற்றபடி.. சகித்துதான் போக வேண்டியிருக்கிறது. இன்னும் சொன்னால் - நீயெல்லாம் ஒரு தமிழனா என்று கேள்வி வரும்..!! எதற்க்கு வம்பு.

Tuesday, November 10, 2009

பிடிக்கும், பிடிக்கும்... எனக்கும் பிடிக்கும்...


வாழ்வின் எந்த ஒரு விஷயமும் பிடித்து போவதற்க்கும், பிடிக்காமல் போவதற்க்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசத்தில் இருக்கிறது. மனிதர்களும், சம்பவங்களும், பொருள்களும் கூட அப்படித்தான். "பிடித்தல்" என்பது சுயம் சார்ந்த வாழ்வின் அடிப்படையோடு உணர்வு ரீதியாக உறவு கொள்ளும் விஷயங்களையே குறிக்கிறது என்பது மனோதத்துவம். "பிடிக்காதது" என்பது எதிர்மறையல்ல - அது ஒரு "அவ்வளவாக இணக்கமில்லை" எனும் கருத்தேயாகும். வெறுப்பதற்கும் பிடிக்காமல் போவதற்க்கும் வேறுபாடுகள் உணர்வோமாயின் வாழ்வின் எல்லாம் விஷயங்களையும் கொஞ்சம் சுலபமான பார்வையோடு அணுக முடியும்...

இந்த "தொடர் கருத்து" பதிவுகளுக்கு அழைத்தமைக்கு தோழிக்கு நன்றி. இந்த பதிவுக்கு சிந்திக்கும் போது - முதலில் தோன்றிய பெயர்களுக்கும், பின்னர் சிறு சிந்தனைக்கு பிறகு தோன்றிய பெயர்களுக்கும் வேறுபாடு இருந்தது உண்மை. எனினும் ரொம்ப பெரிய சிந்தனை எதுவும் இன்றி - எங்கள் (நானும் ரேவதியும்..) கருத்துகளை இணைக்கிறேன். விதிகளுக்கு உட்பட்டு மனிதர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன் - இயக்கங்கள் அல்லது குழுக்கள், மனிதர்கள் அல்லாத பெயர்கள் (திரைப்படங்கள், இடங்கள்) ஆகியன தவிர்க்கபட்டிருக்கின்றன. அதுபோலவே விமர்ச்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என சில பிரபலங்களையும் கத்தரித்து இருக்கிறோம்.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

இயக்குனர்

ராதாமோகன், கவுதம் வாசுதேவ மேனன், கமலஹாசன் - இவர்களின் பல திரைப்படங்கள் ஏற்படுத்திய +உணர்வுகளுக்காக.

ஹரி, டி.ராஜேந்தர், எஸ்.ஜே.சூர்யா - இவர்களின் பல திரைப்படங்கள் ஏற்படுத்திய -உணர்வுகளுக்காக.

ஆன்மீகம் மற்றும் தத்துவம்

ஜக்கி வாசுதேவ் - தத்துவமும் ஆன்மீகமும் இணைந்த சிந்தனைகள்

நித்யானந்தர் - அதீத தத்துவ பிரயோகங்கள், வீண் விளம்பரங்கள்

எழுத்தாளர்

கி.ராஜநாராயணன், ரமேஷ்-பிரேம், எஸ். ராமகிருஷணன் - மனிதர்களை வேறு பரிமாணத்தில் அறிமுகம் செய்தமைக்காக

சாருநிவேதிதா, ரமணி சந்திரன்  - ஸ்டீரியோ டைப் எழுத்துகள்

இசையமைப்பாளர்

யுவன் சங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் - புதிய இசை

தேவா, விஜய் ஆண்டனி - சத்தங்கள் மற்றும் "பழைய" இசை

பேச்சாளர்கள்-பட்டிமன்றம்

நெல்லை கண்ணன் - தமிழய்யாவின் பேச்சு மொழி

லியோனி - சினிமா பாடல்களிலேயே உலகம்

ஓவியர்

மணியம் செல்வன், மாருதி, மருது, மதன் - வர்ணங்களும் கோடுகளும் கலந்திருக்கும் விதம், நவீன ஓவியங்கள்

அரஸ், ஜெயராஜ் - ஒரே மாதிரி சித்திர அமைப்பும் - வேறுபாடில்லாத உருவங்களும்

சின்ன திரை நட்சத்திரங்கள்

கோபிநாத், ரமேஷ் பிரபா, அனு ஹாசன் - கொஞ்சம் புத்திசாலித்தனம், ஸ்டுடியோவுக்கு வெளியிலான உலகம் பற்றிய கோணம்

ரபிக் பெர்நாட், கொஞ்சும் கிளிகள்-/தொகுப்பாளினிகள் - எல்லாம் குழப்பம்தான்

கவிதைகள் எழுதுபவர்

அய்யப்ப மாதவன், லீனா மணிமேகலை, சுகிர்த்தராணி, மனுஷ்யபுத்திரன் - புதிய சிந்தனைகள், வாசிப்பு அனுபவங்களை உருவாக்குதல்

தபு சங்கர் - உருகி உருகி எழுதினாலும் - காதலை வட்டத்துக்குள் பூட்டுதல்

தயாரிப்பாளர்

சங்கர், பிரகாஷ்ராஜ் - கொடுத்த திரைப்படங்கள்

கலாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின் - கெடுத்த திரைப்படங்கள்

ஒளிப்பதிவாளர்

ஆர்.டி. ராஜசேகர் (காக்க காக்க, கஜினி, பீமா, சில்லுனு ஒரு காதல்...) - ஓவிய அமைப்பில் ஒளிபதிவு

மனோஜ் பரமாம்சா. (அரசாட்சி, பம்மல் க சம்பந்தம், மதுர, திருபாட்சி, திருப்பதி.. ) - வெளிச்சமும் இருட்டும் இன்னும் கைவரவில்லை

அவ்வளவுதான்..!!!

விவாதங்கள்கள் சுவரஸ்யமாக இருக்குமா - தெரியவில்லை.

நான் அழைக்கும் பதிவாளர்கள்- இவர்கள் எல்லாம் இந்த தொடர்பதிவில் பங்கேற்று விட்டார்களா தெரியவில்லை – எனக்கு தெரிந்து இல்லை. எனவே.

1. http://www.nilaraseeganonline.com/ - nilaraseegan@gmail.com

2. http://enninavinveliyilnan.blogspot.com/ - rajahparameswary@yahoo.co.in

3. http://maniyinpakkam.blogspot.com/ - pazamaipesi@gmail.com

Saturday, April 25, 2009

அலட்சியம்...

இந்த தேர்தல்ல எத்தனை பேர் ஓட்டு போட போறாங்க..!! அதுவும் முக்கிய வேலை நிமித்தமா வெளியூருல இருக்குற தோழர்கள் மற்றும் தோழமைகள்..!! 1 நாள் லீவு சரி.. ஆனா அந்த ஒரு நாள் சொந்த ஊருக்கு போய் - அல்லது ஓட்டு இருக்குற ஊருக்கு போய் ஓட்டு போட முடியுமா..!! எத்தனை வெளி இடங்களில் வேலை செய்யும் நண்பர்கள்.. எத்தனை மாணவ மாணவிகள்..!! அத்தனை பேரும் நிச்சயம் ஓட்டு போட போவதில்லை. சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற இடங்களில் வேலை செய்யும் கடை பசங்கள் முதல்கொண்டு இந்த முறையை தங்கள் ஜனநாயக கடமையை செய்ய போவதில்லை. இணையத்தில் தேடியதில் - தபால் ஓட்டு தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானாம்..!! மற்றபடி நமக்கு கிடையாது..!! நாம் தற்போது இருக்கும் இடத்துக்கு ஓட்டு உரிமையை மாற்றி கொள்ள வசதி இருக்கிறதாம் - இது இப்போதுதான் தெரியும்..!! இதனை பற்றி எந்த விளம்பரமும் செய்யபடிவில்லை - நான் பார்த்த பத்திரிக்கை மற்றும் டெலிவிஷன் சேனல்களில். ஓட்டு போட சொல்லி சில விளம்பரங்கள் பார்த்திருக்கிறேன்..!! கடந்த 10 வருடங்களில் இந்திய வேலை வாய்ப்பு என்பது எந்த இடத்துக்கும் இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்பது குழந்தை கூட அறிந்ததே.!! அப்படி இருக்க...இவர்களுக்கு இத்தகைய முக்கியமான விஷயத்தை பற்றி எந்தவித அறிவுறுத்தலும் எந்த முறையிலும் கொடுக்கபடாதது ஏன்..! அலட்சியம் எனவும் கொள்ளலாம் ..! நமக்கும் கேட்டு தெரிந்து கொள்ள தோன்றவில்லை - அரசாங்கமும் தனியாரும் கவனிக்கவில்லை.!! மொத்தத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இழப்பு மக்களாகிய நமக்குதான்..!!

Thursday, April 23, 2009

சும்ம்மா அதிருதில்லா..!!

அப்பாடா.. ஒரு வழியாக "தமிழின துரோகி" என்ற பட்டத்தை ஏற்று கொள்ளாமல் இருக்க ஒரு வேலை நிறுத்த நாடகத்தை நடத்தியாகிவிட்டது. சும்மா மிரட்டிடோமில்ல..!! இலங்கை அரசாங்கம் பயந்து போய் ராஜபக்சேவுக்கு வேப்பிலை அடிச்சுட்டு இருக்காங்கலாம்..!! நாம எல்லாம் சிங்கமுல்லா..!! இங்க வேலைக்கு போகாம உட்கார்ந்து - லேட்டா படுக்கைல இருந்து எந்திருச்சு (நேத்தி ராத்திரி தண்ணி மப்பு தெளிய வேணாமா..!! ) கலைஞர் டிவில போட்ட எல்லா சினிமாவும் பார்த்துட்டு.. வூட்டுல தூங்கி எந்திரிச்சு .. எத்தன பெரிய போராட்டம்.. சும்ம்மா அதிருதில்லா..!! அட .. இன்னும் சில பேரு.. அப்பிடியே மொட்ட மாடில நின்னு.. இலங்கை இருக்கிற திசை பார்த்து ஒரு கண்ணு சிவக்க முறைச்சதுல.. அங்க கடல் எல்லாம் அலையோ அலையாம்.. ஸ்வீடனும், நார்வேவும்.. இன்னும் பல நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்துன நடவடிக்கைகளை விட... நாம நடத்துன வேலை நிறுத்த போராட்டதோட விளைவு..!! (இதுல கலந்துக்க மாட்டோம்னு ஒரு அரசியல் கட்சியோட - அரசியல் நாடகம் வேற..!!) இலங்கைல போர் நிறுத்தம் அறிவிச்சுடாங்களாம்..!! அங்க புதிய வானம் புதிய பூமினு .. பூக்கள் பூக்குதாம்.. காயம் பட்டவங்க எல்லாம் முழு ஆரோக்கியத்தோட இருக்கிறாங்களாம்.. செத்தவங்க கூட எந்திரிச்சுடாங்கலாம்..!! அப்புறம் இலங்கை அரசாங்கம் நம்ம அரசியல் சிங்களோட தாக்குதல் தாங்க முடியாம மண்டி போட்டு..****** !! அட.. விடுங்கப்பூ..!! இன்னும் இருக்கு விளையாட்டு..!! நாமதான் ஓட்டு போடற ஆடுக..(நிஜம்மா ஆளுக கிடையாது.. ஆடுகதான்..!!) நாம பாக்காட்டி யாரு பாப்பா இந்த ஆட்டமெல்லாம்..!!

Sunday, April 19, 2009

விதிசெவி இரண்டும்...

6 மாதங்கள் முன்பு வரை நானும் மொபைல் போனில் அதிக நேரம் பேசி கொண்டுதான் இருந்தேன். யாரேனும் ஒருவர் ஏதாவது காரணத்துகாக கூப்பிடுவதுண்டு - நானும் பலரை அழைப்பதுண்டு. சில நேரம் அலுவலக பணிகள் - பல நேரம் நண்பர்கள்... அப்புறம் ஒருநாள் வந்தது அந்த காது வலி... முதலில் "LG 2500- ." ஒரு சிறிய வகை மொபைல் உபயோகபடுத்தும் போது அதிகம் காது வலி வந்ததில்லை. அதனை கிட்டதட்ட 2 வருடம் உபயோகபடுத்தினேன்.. பின்னர் ஒரு "Nokia 6233" .. சில நேரம் இயர்-போன் உபயோகபடுத்தினாலும் பல நேரம் நேரடியாக காதில் வைத்து பேசுவதுண்டு.. காது வலி என்பது காது, தொண்டை மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற வலி... பின்னர் இயர்-போன் போட்டு பாட்டு கேட்டாலும் வலிக்க ஆரம்பித்தது. பர்கிட் ரோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவரை சந்தித்தோம் நானும் நண்பரும். சில நிமிட பரிசோதனைகளுக்கு பிறகு அவர் சொன்ன ஒரே மருந்து - "மொபைல் போனில் பேசாதீர்கள் - அப்படி அவசியம் பேச வேண்டும் என்றால் ஸ்பீக்கர்போனில் பேசலாம் - நேரடியாக காதில் வைத்து பேச வேண்டிய விஷயம் என்றால் குறைந்த நேரத்தில் பேசி முடிப்பது நல்லது. மொபைல் போனில் பேசுவதை விட - வாய்ப்பு இருந்தால் டெலிபோனில் பேசுவது நல்லது... " - இவற்றை கடைபிடிக்க தவறினால் பின்னர் பிரச்சனைகள் பெரியதாகலாம் - காது முழுவதும் கேட்காமல் போகலாம் - அதீத தலைவலி வரலாம் - Etc, Etc... அவர் சொன்ன ஆலோசனைகளை கடைபிடிக்க ஆரம்பித்த பின்னர் காது வலி வருவதில்லை.. இன்றைய சூழ்நிலையில் நிறைய பேரை சாலையில் FBI ஏஜெண்ட் போல காதில் இயர் போனோடுதான் பார்க்கிறேன். நிறையபேர் பேசிகொண்டு போகிறார்கள்..(பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது - யார் பெற்ற பிள்ளையோ..!!) இன்னும் பலர் FM அல்லது MP3 பாட்டு (அப்படி என்ன இசை ஆர்வமோ தெரியவில்லை..!!) .. இன்றைய மொபைல் போன்கள் அவற்றின் அடிப்பவை பயன்பாடு தாண்டி நிறைய வசதிகளை வழங்குகின்றன.. ஆனால் தரம் இறங்கிவிட்டது. மொபைல் போனில் ஸ்பீக்கர் சத்தம் - எல்லா "Mode"களிலும் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று ஒரு கணக்கு விகிதம் உண்டு. ஆனால் எந்த மலிவு விலை (சைனா , கொரியா மொபைல் போன்கள் - மலிவு விலையில் பர்மா பஜாரிலும், சத்யா பஜாரிலும் விற்க்கபடுவதுண்டு) மொபைல்போனிலும் இவை கடைபிடிக்கபடுவதில்லை. "Nokia" "LG" "Samsung" போன்ற முண்ணனி நிறுவனங்கள் கூட ஸ்டைலுக்காக அறிமுகபடுத்தியுள்ள எந்த மொபைல் போனிலும் விதி மீறல் உள்ளதை மறுத்ததில்லை. நெடுநேரம் காதில் வைத்து பேசுவது, இயர்-போனில் பேசுவது, இயர்-போனில் பாட்டு கேட்பது, ஐ-பாடில் பாட்டு கேட்பது - எல்லாம் மெல்ல மெல்ல செவித்திறனை குறைத்து, காதில் வலி, தலை வலி ஆகியவற்றை கொண்டு வருகிறது. சின்ன சின்ன தினப்பேச்சுகளை முடிந்தவரை இண்டர்காமில் பேசலாம். அல்லது எழுந்து போய் பார்த்து பேசிவிட்டு வரலாம் (ஒரே கட்டிடத்தின் இரு வேறு பகுதிகள் என்றால்). நண்பர்களுடன் பேச நேரம் அமைத்து கொண்டு (அவர்களையும் வேலைக்கு மத்தியில் தொந்தரவு செய்யாமல் இருந்தது போல இருக்கும்) வீட்டில் உட்கார்ந்து ஸ்பீக்கர் போனில் நிம்மதியாக பேசலாம். வெகு அவசியமாக அழைப்புகளை குறைந்த நேரத்தில் பேசி முடிக்கலாம். பாட்டு கேட்க அமைதியான சூழ்நிலை வேண்டும்.. வீட்டில் ஸ்பீக்கர் போனிலோ அல்லது MP3 பிளேயரிலோ பாட்டு கேட்கலாம்.. முடிந்தவரை இயர் போன் உபயோகபடுத்துவதையும், காதில் போனை நேரடியாக வைத்து பேசுவதையும் தவிர்க்கலாம். உலகம் எல்லாம் ஒரு விழிப்புணர்வு பெருகிவருகிறது இந்த விஷயத்தில். விதிசெவி இரண்டும் வேலவர் காக்க - என்று சாமி கும்பிட்டு கொண்டு இருக்காமல் நாம் கொஞ்சம் புத்திசாலிதனமாக இருந்தால் - நமக்குதான் நல்லது.