அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, September 05, 2007

இனி ஒரு விதி...


இன்று காலை அலுவகம் வரும் வழியில் சுவற்றில் அச்சிடபட்டிருந்த ஒரு விளம்பரம் "திருக்குறளை சட்டமாக்கு" என யாரையோ மிரட்டியது. அட... இதுவும் நல்லதுதான். சட்டம் போலவே திருக்குறள் பற்றிய அனுமானங்கள்தான் நிறைய பேருக்கு உண்டு - யாரும் முழுதாக படித்ததில்லை. ஆனாலும் சட்டமாக்க பட கூடிய விஷயங்கள் எல்லாம் திருக்குறளில் உண்டு - அரசியல் பொருளாதாரம் வாழ்க்கை தொழில் காமம் என கற்று கொள்ள ஆயிரம் உண்டு...

என்ன...! பலருக்கும் பிரச்சனை வரும்... வாழ்க்கைமுறையை மாற்ற வேண்டி இருக்கும் - நிறைய விஷயங்களை மறுபடியும் வேறு மொழியில் புரிந்து கொள்ளவேண்டி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஒழுக்கமான நல்ல வாழ்க்கை புளித்து போகும் - அப்புறம் திடீரென பழைய சட்டங்களே பரவாயில்லை என தோன்றும்.

திருக்குறள் வேண்டாம் என போராட்டம் நடத்துவார்கள் - அது தமிழே கிடையாது என்பார்கள்... திருக்குறளை குற்றம் சொல்லியும் - வள்ளுவரின் வாழ்க்கை பற்றிய விமர்சனங்களும் கூட தெருவுக்கு வரும். மறுபடியும் சக்கரம் சுற்றி எல்லாரும் அவரவர்களுக்கு வசதியான சட்டங்களை படைத்து கொள்வார்கள் - அதில்தான் நாம் மேதாவிகள் ஆயிற்றே...

திருக்குறள் நல்ல விஷயம்தான்... பாரதி சொன்னது போல - இனி ஒரு விதி செய்யும் பணி. ஆனால் யாருக்கு புரியும்... அரசியல் தெருவில் விளையாடும் நம் தேசத்தில்...??