அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, June 18, 2006

கனவு..

ஒரு விசித்திரமான விந்தை.. மூளையின் அற்புதமான செயல்பாடு.. சமீப காலமான நானும் கனவுகளை பற்றி இணையத்தில் படித்து வருகிறேன்.. இந்தியாவில் உள்ளது போலவே எல்லா நாடுகளிலும் கனவுகளுக்கு பலன் எழுதுகிறார்கள்.. என் பிரச்சனை அது அல்ல.. மூளையின் விஸ்தாரமான செயல்பாடுகளை நான் வியந்து கொண்டு இருக்கிறேன்.. சுஜாதாவின் தலைமை செயலகம் பிள்ளையார் சுழி. சிக்மண்ட் பிராய்ட் கனவுகளை பற்றி, அவை சொல்லும் மானிட தன்மைகள் பற்றி அடிமனதின் நினைவு தேக்கங்கள் பற்றி பேசுகிறார்.. ஒரு மனோதத்துவ நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும் போது, என் கேள்விகளை சொன்னேன்.. அவரின் பதில்களின் சாராம்சம்.. கனவு மூளையில் உதயமாகும் ஒரு இன்ஸ்டண்ட் சினிமா.. இதன் பிரதிபலிப்பு உடலிலும் இருக்கும்.. வாழ்வில் அனுபவித்து அறியாத உணர்வுகளை பற்றி மூளை திரட்டி வைத்திருக்கும் தகவல்களை இந்த கனவுகளின் பிரதிபலிப்பாக உடலில் உணரலாம்.. கனவுகளின் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் பெறும்பாலும் கடந்த சம்பவங்களில் அறிந்தவை / உணர்ந்தவை.. அதுவும் தவிர முற்றிலும் புதிய கதாபாத்திரங்களும் சம்பவங்களும் வருவதுண்டு...அவை மூளை கொண்ட தகவல் சுரங்கம். படித்தவை, பார்த்தவை, கேட்டவை, உணர்ந்தவை.. எல்லாம் தகவல்கள். இவற்றை ஒருங்கிணைப்பவை கனவுகள்.. எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் கனவுகள் சுவரஸ்யம் மிகுந்தவை என்று படித்து இருக்கிறேன். கனவுகளை பற்றி பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு தோழி உண்டு.. என் கனவுகளுக்கு சில நேரம் பலன்கள் சொல்வாள். அவளின் கனவுகள் பெறும்பாலும் தேவதை கதைகள் போன்றவை.. என் கனவுகள்... சொல்லமுடியாது..நாளைக்கே நடந்து விடலாம்.. அவ்வளவு நிஜம் சார்ந்தவை.. சிலவற்றை நிஜவாழ்விலும் கண்டு வியந்திருக்கிறேன்.. மருத்துவம் ஒத்து கொள்ளாது.. மூளையின் கிரகிக்கும் திரணில் உள்ள சிறு குறைபாடு இந்த விந்தையை நிகழ்த்துகிறது என சொல்வார்கள்.. சில இரவுகளில் கனவுகளை எதிர்பார்த்து காத்திருந்து இருக்கிறேன்.. அவை மெல்ல மெல்ல என்னை அட்கொண்டு இருக்கும்.. சிறு குழந்தைகள் கதைகளுக்கு காத்திருப்பது போல..வாழ்வின் சில கட்டங்கள் கனவுகளை அடிப்படையாக கொண்டவை.. நிகழ்வுகள் எல்லாம் கனவுகள் போல.. கனவுகள் மட்டும் நிகழுவுகள் போல..

சில புத்தகங்களும் சில கருத்துகளும்...

சமீபத்தில் ஒரு வார இதழில் எழுத்தாளர் மற்றும் கார்டூனிஸ்ட் மதன் படித்த சமீபகால புத்தகங்களில் அயல் நாட்டு கவிஞர்கள் எழுதிய காமம் சார்ந்த கவிதைகள் பற்றி சொல்லியிருந்தார். நானும் சில கவிதைகளை இணையத்தில் படித்து இருக்கிறேன்.. கவிதை நயமும், மென்மையான காமமும் சொல்லும் அற்புதமான கவிதைகள்.. சிலவற்றை மொழிபெயர்க்கவும் முயற்சித்து கொண்டு இருக்கிறேன்.. இன்றைக்கு நம் சினிமா பாடல்களில் காமம் வெளிப்படையாக தெரிவது போல இருக்காது அந்த கவிதைகள்.. மென்மையானவை.. உணர்வுகளை பேசுபவை.. உணர்ச்சிகளை அல்ல. இங்கே எரொடிக் (Erotic) என்று சொல்லபடும் கருத்துகளை கொண்ட புத்தகங்கள் ரொம்ப கம்மி. எல்லாருக்கும் அந்த புத்தகங்களை ரெண்டு பக்கமும் 'பின்' அடித்த மை குடிக்கும் பக்கங்களை கொண்ட, எழுத்து பிழை உள்ள புத்தகங்கங்களின் முறையில் தான் தெரியும். சிறுகதை இலக்கியத்திலும்.. கட்டுரை இலக்கியத்திலும்..கவிதை இலக்கியத்திலும் இவை குவிந்து உள்ளது.. ஒரு காலத்தில் நான் தேடி தேடி படித்ததுண்டு.. இன்னும் படிப்பதும் உண்டு. ஒரு நல்ல வரிசை தயார் செய்து விட்டு இங்கே பதிப்பிக்கிறேன். கி.ராஜநாராயணன், புதுமைபித்தன், பாரதியார், ல.சா.ரா., கு.பா.ரா, தி.ஜானகிராமன், ரமேஷ்-பிரேம், சாருநிவேதா,சுகிர்தராணி இவர்கள் கொஞ்சமே .. இன்னும் லட்சம் பேர் உண்டு... நான் படித்தவர்களில் நன்கு நினைவு உள்ளவர்கள் இவர்கள்.. சொல்லாமல் விட்டவர்கள் இருந்தால் மன்னிகவும்... போன் செய்து திட்ட வேண்டாம்..

ஒரு முறை ஒரு நண்பனின் திருமணத்துக்காக புத்தகம் பரிசாக கொடுக்கலாம் என தீர்மானித்தோம். சென்னையின் மிக பிரபலமான புத்தக கடை அது.. தமிழுக்கான புத்தகங்கள் ரொம்ப கம்மி. தமிழ் புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது எரொடிக் புத்தங்கள் உள்ள பகுதி. ஆங்கிலத்தில் காமசூத்திரம் வாங்கினோம். அங்கே நின்றாலே பார்ப்பவர்கள் பார்வையில் ஒரு கிண்டல் தென்பட்டது. பில் போடும் இடத்தில் பெண் நமுட்டாய் சிரிக்கிறாள். பக்கத்தில் இருப்பவர் ஏதோ பாவ காரியம் பார்பவர்போல முகம் சுளிக்கிறார்.. ஆனால் எல்லாருக்கும் அங்கே உள்ள புத்தகங்களை பார்க்கம் புரட்டி படிக்க உள்ளே ஆர்வம் இருக்கிறது. .. தைரியம் இல்லை.. இவர்களால்தான் காமம் சரியான் முறையில் உணரபடவில்லை.. தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை. உபயோகபடுத்தி பார்பதில் தெளிவும், கொஞ்சம் கட்டுபாடும் போதும்..

கிடக்கிறார்கள்... அப்புறம் நான் 6 புத்தகங்கள் வாங்கினேன்.. 3 கவிதைகளும், இரண்டு கட்டுரைகளும்.. ஒரு சிறுகதைகளும் கொண்டவை. காமம் அடிப்படை உணர்வாக இருக்கிறது. காதலைவிட..காமமே உறவுகளில் மேலோங்கி இருக்கிறது.. ஒத்து கொள்வதில் மாறுபாடுகள் இருக்கலாம்.. சமூக சூழல், வளர்ப்புமுறை, சொல்லி கொடுக்கபட்டவை, மதம், வயது, வாழ்க்கை முறை, விருப்பு வெறுப்புகள்.. காரணங்கள் பலவாறு உண்டு....இயக்கத்தின் காலம் தொட்டு, மனித இனம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இதில் ஒன்றில்தான் என்பது என் கருத்து. தெளிவான காமம்.. தியானம் போன்றது.. ஒரு வகையில் ஆன்மூகம்.. நான் மட்டும் சொல்லவில்லை.. ஓஷோவும் சொல்கிறார்.. வாழ்கை பற்றி வாஸ்தியானர் சொன்னதை மெல்ல மெல்ல கதைகளில் ஒரு நீரோடை போல பாலகுமாரனும் சொல்கிறார்.. திரிகூட ராசப்பகவிராயர் சொன்னதை.. குறத்தி கவிதைகளில் உள்ளதை வைரமுத்துவும் வாலியும் சொல்கிறார்கள்.. எல்லாம் சொல்லி என்ன..? இங்கே எல்லா பூனைகளும் சைவ வேடம் தான்.

குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள்.

திரை.. இந்த புத்தகம் கடைகளில் கிடைப்பது பெரும்பாடு.. ஒரு மாதம் வந்தால் அடுத்தமாதம் கிடைப்பதில்லை.. வழக்கம்போல நிறைய பேசியிருக்கிறார்கள்... கிரீஸ் காசரவள்ளியின் கன்னடபடங்கள்...75 ஆண்டுகள் மலையாள சினிமா .. கோவிந்த் நிகலானியின் கலந்துரையாடல்- ஆகியவை நான் ரசித்த சில. மேலும் ஒரு சுவரஸ்யமான விஷயம் கனவுப்பட்டறை என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்படும் புத்தகங்கள் குறும்படங்கள் மற்றும் விவரணப்படங்கள். வெகு சீக்கிரம் சில புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் வாங்குவேன் என நினைக்கிறேன்.. பின்னர் அவர் பற்றி எழுதலாம்.. அயல்நாட்டு திரைப்படங்கள் அவற்றில் வரும் விஸ்தாரமான உடலுறவு காட்சிகளுக்காகவே கவனிக்கபடுவதாக ஒரு முறை சுஜாதா சொல்லியிருந்தாக நினைவு. என் பார்வையில் அவை ஒரு வகையான உணர்வு வெளிப்பாட்டின் பங்களிப்பு. நம் திரைப்படங்களின் பாடல்களை போல.. நிஜ வாழ்வில் உடலாலான ஈர்ப்பும் தொடுகையும் மிக இயல்பாக நம்மால் கையாளப்படுகின்றன.. பாடல்கள் யாராலும் பாடபடுவது இல்லை. சில நேரங்களில் சில அபூர்வமான பாடல்கள் தொடுகையும் ஈர்ப்பையும் வேகப்படுத்தி இருக்கின்றன.. உணர்வுகளை தூண்டும் தருணங்கள் அவை. குறும்படங்களில் இந்த குழ்ப்பங்கள் இருப்பதில்லை. சில நிமிடங்கள் விவரம் சொல்லும் வேகம் மட்டுமே.. சில நேரங்களில் இரண்டு முறை பார்த்தால் மட்டுமே புரிகிறது. வெகுஜன திரைப்படங்களை விட.. கதையும் கதையின் போக்கும் அற்புதமாக படமாக்கபடும் விதம் இதில் உள்ளது. வாழ்வின் மிக சிறிய... நாம் பொதுவில் கவனிக்க தவறும் தருணங்கள் இத்திரைப்படங்களில் கையாளப்படுகின்றன. நேரம் கிடைத்தால் நீங்களும் பாருங்கள்.. பின்னர் பகிர்ந்து கொள்ள எனக்கும் நண்பர்கள் வேண்டும்...