அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, June 18, 2006

கனவு..

ஒரு விசித்திரமான விந்தை.. மூளையின் அற்புதமான செயல்பாடு.. சமீப காலமான நானும் கனவுகளை பற்றி இணையத்தில் படித்து வருகிறேன்.. இந்தியாவில் உள்ளது போலவே எல்லா நாடுகளிலும் கனவுகளுக்கு பலன் எழுதுகிறார்கள்.. என் பிரச்சனை அது அல்ல.. மூளையின் விஸ்தாரமான செயல்பாடுகளை நான் வியந்து கொண்டு இருக்கிறேன்.. சுஜாதாவின் தலைமை செயலகம் பிள்ளையார் சுழி. சிக்மண்ட் பிராய்ட் கனவுகளை பற்றி, அவை சொல்லும் மானிட தன்மைகள் பற்றி அடிமனதின் நினைவு தேக்கங்கள் பற்றி பேசுகிறார்.. ஒரு மனோதத்துவ நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும் போது, என் கேள்விகளை சொன்னேன்.. அவரின் பதில்களின் சாராம்சம்.. கனவு மூளையில் உதயமாகும் ஒரு இன்ஸ்டண்ட் சினிமா.. இதன் பிரதிபலிப்பு உடலிலும் இருக்கும்.. வாழ்வில் அனுபவித்து அறியாத உணர்வுகளை பற்றி மூளை திரட்டி வைத்திருக்கும் தகவல்களை இந்த கனவுகளின் பிரதிபலிப்பாக உடலில் உணரலாம்.. கனவுகளின் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் பெறும்பாலும் கடந்த சம்பவங்களில் அறிந்தவை / உணர்ந்தவை.. அதுவும் தவிர முற்றிலும் புதிய கதாபாத்திரங்களும் சம்பவங்களும் வருவதுண்டு...அவை மூளை கொண்ட தகவல் சுரங்கம். படித்தவை, பார்த்தவை, கேட்டவை, உணர்ந்தவை.. எல்லாம் தகவல்கள். இவற்றை ஒருங்கிணைப்பவை கனவுகள்.. எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் கனவுகள் சுவரஸ்யம் மிகுந்தவை என்று படித்து இருக்கிறேன். கனவுகளை பற்றி பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு தோழி உண்டு.. என் கனவுகளுக்கு சில நேரம் பலன்கள் சொல்வாள். அவளின் கனவுகள் பெறும்பாலும் தேவதை கதைகள் போன்றவை.. என் கனவுகள்... சொல்லமுடியாது..நாளைக்கே நடந்து விடலாம்.. அவ்வளவு நிஜம் சார்ந்தவை.. சிலவற்றை நிஜவாழ்விலும் கண்டு வியந்திருக்கிறேன்.. மருத்துவம் ஒத்து கொள்ளாது.. மூளையின் கிரகிக்கும் திரணில் உள்ள சிறு குறைபாடு இந்த விந்தையை நிகழ்த்துகிறது என சொல்வார்கள்.. சில இரவுகளில் கனவுகளை எதிர்பார்த்து காத்திருந்து இருக்கிறேன்.. அவை மெல்ல மெல்ல என்னை அட்கொண்டு இருக்கும்.. சிறு குழந்தைகள் கதைகளுக்கு காத்திருப்பது போல..வாழ்வின் சில கட்டங்கள் கனவுகளை அடிப்படையாக கொண்டவை.. நிகழ்வுகள் எல்லாம் கனவுகள் போல.. கனவுகள் மட்டும் நிகழுவுகள் போல..

No comments: