அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, April 15, 2009

கடவுள் வழிபாடு எனும் குழப்பம்

சென்ற வார இறுதியில் சனிக்கிழமை வெங்கடநாராயணா சாலையில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. மாமனார், மாமியாருடன், ரேவதியும் நானும் சென்றோம். நல்ல கூட்டம் - வழக்கம் போல. கோவில்களில் உள்ள கூட்டத்தை பற்றியும் இந்து வழிபாடு முறை பற்றியும் ரேவதிக்கு காட்டமான கருத்துகள் நிறைய உண்டு. என் கருத்துகளை அவற்றில் கோபமும் கேள்விகளும் இருக்கும். "கடவுள் என்பது என்ன" போன்ற பொருள்முதல் வாத தத்துவ புத்தகங்களை படிக்கும் பெண்.. கேள்விகளும் அப்படித்தான் இருக்கும். அது என்ன - எந்த கடவுளுக்கும் இல்லாத கூட்டம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் ..!! "காசு வேண்டும்" என்ற மனம்தான் காரணம் என்றேன் நான்..!! மற்ற கடவுள் எல்லாம் - பொருளாதார அளவில் பெரிய அளவில் பிரபலபடுத்தபடவில்லையே - அங்கெல்லாம் - கல்வி, உடல் ஆரோக்கியம் மற்றும் பல விஷயங்கள்கள்தான் பிராத்தைனை விஷயங்கள் ஆகிறது போல. அதுவும் தவிர - இந்த மாதம் இந்த சாமி, அடுத்த மாதம் வேறு சாமி கும்பிடு என்று பிரபலபடுத்தும் ஆன்மீக புத்தகங்கள் வேறு.. !! ஒரு சாமியை விட அடுத்த சாமி பெரிது என்று ஒரு பிம்பம் காட்டுகிறார்கள் - ஆனால் கடவுள் ஒன்று என்றும் குழப்புகிறார்கள்.. !! யாரும் - "நல்ல மனம் வேண்டும்" என்று கும்பிடுவதாக தெரியவில்லை - பொதுவாக சொல்லவில்லை - நிறைய பேர் காசு மினுமினுக்கதான் கோவிலுக்கே வருகிறார்கள். ஒரு சட்டை, வேட்டி அல்லது பேண்ட், புடவை, சுடிதார் போதாதா கோவிலுக்கு வர - ஒரு பேசன் பேரேடே நடக்கிறது பல நேரங்களில்..!! சரி.. இது எல்லாம் அவரவர் சொந்த விஷயம் - தலையிட கூடாது.. கோவிலில் அதிகாரம் எதற்கு... தனி வரிசை எதற்கு ..!! காசு கொடுத்தால் பக்கத்தில் சாமி பார்க்கும் வசதி எதற்கு.. அப்படி நிற்பவருக்கு மட்டும் மாலை மரியாதை எதற்கு.. காசு கொடுக்காவிட்டால் சில கோவிலில் விபூதி கூட தூக்கித்தான் வீசுகிறார்கள் சில கோவிலில்.. தென் தமிழ் நாட்டின் சில கோவில்களில் கேட்டால் சில தலபுராணங்களையும், பாடல் பெற்ற விஷயங்களையும் சொல்கிறார்கள்.. அப்படி சொல்லும் கோவில்கள் எத்தனை இருக்கின்றன.. எத்தனை பேருக்கு விஷயம் தெரியும்.. கட்டின ராஜா யார் என்று கூட தெரியாது.. முகம் தெரியாத சிற்பிகளின் உழைப்பு தெரியாது..!! ஆன்மீக கலாச்சாரம் என்று ஒரு மாயை இருக்கிறது. கடவுள் மறுப்பு என்பது வேறு - கேள்வி கேட்பது என்பது வேறு..!! எதனையும் கொஞ்சம் கேள்வி கேட்டால்தான் எல்லாமே ஒரு வழிமுறைக்கு வரும் என்பது ஒத்துகொள்ளகூடிய கருத்து..!!

1 comment:

Several tips said...

ஆமாம் படு குழப்பம்