அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Thursday, April 23, 2009

சும்ம்மா அதிருதில்லா..!!

அப்பாடா.. ஒரு வழியாக "தமிழின துரோகி" என்ற பட்டத்தை ஏற்று கொள்ளாமல் இருக்க ஒரு வேலை நிறுத்த நாடகத்தை நடத்தியாகிவிட்டது. சும்மா மிரட்டிடோமில்ல..!! இலங்கை அரசாங்கம் பயந்து போய் ராஜபக்சேவுக்கு வேப்பிலை அடிச்சுட்டு இருக்காங்கலாம்..!! நாம எல்லாம் சிங்கமுல்லா..!! இங்க வேலைக்கு போகாம உட்கார்ந்து - லேட்டா படுக்கைல இருந்து எந்திருச்சு (நேத்தி ராத்திரி தண்ணி மப்பு தெளிய வேணாமா..!! ) கலைஞர் டிவில போட்ட எல்லா சினிமாவும் பார்த்துட்டு.. வூட்டுல தூங்கி எந்திரிச்சு .. எத்தன பெரிய போராட்டம்.. சும்ம்மா அதிருதில்லா..!! அட .. இன்னும் சில பேரு.. அப்பிடியே மொட்ட மாடில நின்னு.. இலங்கை இருக்கிற திசை பார்த்து ஒரு கண்ணு சிவக்க முறைச்சதுல.. அங்க கடல் எல்லாம் அலையோ அலையாம்.. ஸ்வீடனும், நார்வேவும்.. இன்னும் பல நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்துன நடவடிக்கைகளை விட... நாம நடத்துன வேலை நிறுத்த போராட்டதோட விளைவு..!! (இதுல கலந்துக்க மாட்டோம்னு ஒரு அரசியல் கட்சியோட - அரசியல் நாடகம் வேற..!!) இலங்கைல போர் நிறுத்தம் அறிவிச்சுடாங்களாம்..!! அங்க புதிய வானம் புதிய பூமினு .. பூக்கள் பூக்குதாம்.. காயம் பட்டவங்க எல்லாம் முழு ஆரோக்கியத்தோட இருக்கிறாங்களாம்.. செத்தவங்க கூட எந்திரிச்சுடாங்கலாம்..!! அப்புறம் இலங்கை அரசாங்கம் நம்ம அரசியல் சிங்களோட தாக்குதல் தாங்க முடியாம மண்டி போட்டு..****** !! அட.. விடுங்கப்பூ..!! இன்னும் இருக்கு விளையாட்டு..!! நாமதான் ஓட்டு போடற ஆடுக..(நிஜம்மா ஆளுக கிடையாது.. ஆடுகதான்..!!) நாம பாக்காட்டி யாரு பாப்பா இந்த ஆட்டமெல்லாம்..!!

No comments: