அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

கலீல் ஜிப்ரானும் என் காதல்களும்

அது ஏனோ தெரியவில்லை - எனக்கு இதுவரை காதல் என்று வந்ததில்லை. வந்த காதலை எல்லாம் யாரிடமும் சொன்னதில்லை - அது காதல் என்று நான் ஒத்து கொள்ளாததினால்... பள்ளி கூட காலத்தில் வந்தது காதல் இல்லை என்பது என் கருத்து. அழகான பெண்கள் எல்லாம் காதலிகள் - அவர்களின் அம்மாக்கள் எல்லாம் அத்தைகள். குறிப்பாக "ஆண்ட்டி" என்ற வார்த்தை அழகான பெண்களின் அம்மாக்களுக்கு மட்டும்தான் என்றிருந்த காலம் அது. பார்க்கும் பெண்களின் கழுத்துக்கு கீழே செல்லும் பார்வையை தவிர்க்க முடியாத வயதில் வருவது - இனகவர்ச்சியே இன்றி - காதல் இல்லை - எனினும் மறக்கமுடியாத அனுபவங்களை அது
எனக்கு தந்திருக்கிறது.

கலீல் ஜிப்ரானின் கண்ணீரும் சிரிப்பும் கவிதை / கட்டுரை தொகுப்பு - நான் இழந்த காதல்களை கொஞ்சமாக - சில பெண்களின் நினைவுகளோடு இரவுகளில் மீட்டுதருகிறது.


நாம் முதன் முதலாக சந்தித்த
நாள் நினைவிருக்கிறதா உனக்கு?
நமது உணர்ச்சிகளால் சூழப்பட்டு
காதல் தேவதைகள் தாலாட்ட
ஆன்மாவின் ராகங்கள் பாடினோம்...

கானகத்தில் நாம் கைகோர்த்து
நடந்து திரிந்த காலடி சுவடுகளையும்,
முகத்தோடு முகம் இணைத்து பின்
ஒருவருக்குள் ஒருவர் மறைந்து
மூழ்கிப்போனோமே நினைவிருக்கிறதா?

உன்னை பிரிந்தபோது என்னுதட்டில்
முத்தமழை பொழிந்தது மறந்ததா?
காதலின் பொருளை அது சொன்னது
சொர்க்கத்தின் ரகசியங்களை ஒருபோதும்
நாவினால் உரைப்பது என்பது முன்னுரைதான்
அதன்பின் நீண்ட பெருமூச்சுகள்

பெருமூச்சு என்னை புதிய உலகிற்கு
இதயம் மகிழ இழுத்து செல்கிறது
மீண்டும் நாம் சந்திக்கும் வரை
மகிழ்ச்சி மறவாது நிலைத்திருக்கும்
கன்னங்களில் கண்ணீர் வழிய நீ
மீண்டும் மீண்டும் என்னை முத்தமிட்டு
"பூமியில் மனிதர் இணைவது பிரிவது
உலகியல் உள்நோக்கங்களாலே"
உளமார சொல்லி பிரிந்தாய் நீ....

... கவிதைகள் மெல்ல மெல்ல நீள்கின்றன...காதலின் நீட்சி கவிதைகளில் வார்த்தைகளில்... அந்தி வான சிவப்பின் ஆழம் போல... காதலும்...காதல் கவிதைகளும்...

No comments: