அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

தொலைகாட்சியும் முகமறியா மனிதர்களும்...

நேரடி ஒளிபரப்புகளான பாடல் வழங்கும் அல்லது ஒளி/ஒலிப்பதிவு செய்யபட்ட பாடல் வழங்கும் நிகழ்ச்சிகளை பார்த்ததுண்டா நீங்கள்.. ஓவ்வொருமுறை கோவை வரும்போதும் எப்படியாவது தொலைகாட்சியில் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது..மோசமான உச்சரிப்புகள், அர்த்தமில்லாத கேள்விகள், உபயோகமில்லாத பதில்கள்...தொகுப்பாளினியின் உடையலங்காரம் மட்டுமே (ரகசியமான) கவனிப்புக்கு உள்ளாகிறது... பாடல்களை விட பேசும் விஷயங்கள் முட்டாள்தனமானவை. எனினும் முகமறியா மனிதர்களுடன் கொள்ளும் பேச்சு சார்ந்த உறவு கவனிக்கதக்கது. சமீப சில வருடங்களில் இத்தகைய தொலைபேசி மனிதர்கள் அதிகமாகி உள்ளார்கள். தொலைகாட்சியின் டி ஆர் பி ரேட்டிங் இத்தகைய விளம்பரதார் நிகழ்ச்சிகளை முன்னிலைபடுத்துகிறது. தங்கள் நிஜவாழ்வில்
பார்க்கும் கொடுமையான முட்டாள் மனிதர்களை விட...முட்டாள்தனமான விஷயங்களை விவாதிக்கும் (அழகான) தொகுப்பாளினிகள் பேர் பெருகிறார்கள். இது ஒரு போதையாகி கொண்டு வருகிறது. எல்லா இந்திய சேனல்களும் இதில் இறங்கியுள்ளன - பாடல்கள், கேள்வி பதில், வேடிக்கை விளையாட்டுகள் என முகங்கள் மாறினாலும் - இந்த போதையான முட்டாள் உலகத்துள் ஆழ்ந்து போகும் சில நிமிட ஓய்வு எல்லாருக்கும் தேவைபடுகிறது... பேனா நட்பு போல இது தொடரும் நட்பு இல்லை. வானொலி போல ஒரு முகமறியா பந்தம் இல்லை. தொலைகாட்சி தன் மாய கரங்களில் மக்களை மெல்ல கட்டிபோட்டு உள்ளது. முட்டாள்களின் பெட்டி இன்று தேடிவாங்கும் பொருளாக மாறிவிட்டது. இணையமும் இந்த வரிசையில் இணையும் காலம் இருக்கிறது. இணையம் மெல்ல மெல்ல தன் புத்திசாலி முகமூடிகளை விட்டு சாதாரண மனிதர்களின் பொழுதுபோக்கு சாதனமாக மாறிவருகிறது. கணிப்பொறி நிறைய வீடுகளில் மின்னஞ்சல் தவிர பாடல் கேட்கவும் படம் பார்கவுமே பயன்படுத்தபடுகிறது. அறிவு சார்ந்த பொழுது போக்கு மெல்ல மெல்ல விலகி கவர்ச்சியும் வேடிக்கையும் அர்த்தமில்லாத பரபரப்பு செய்திகளும் நிறைந்த பொழுதுபோக்கு மக்களிடையே முன்னிலை படுத்தபடுகிறது... எனக்கு சுஜாதாவின் என் இனிய இயந்திரா நினைவு வருகிறது... என் காலம் வரை வேடிக்கை பார்க்கலாம்...மனிதர்களையும் அவர்களது மாறிவரும் முட்டாள் உலகங்களையும்...

No comments: