அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

அம்மாவின் கடிதம்...

ஆனந்தவிகடனின் 81 ஆவது மெகா சிறப்பிதழில் தமயந்தியின் வாக்குமூலம் என்ற சிறுகதையை வாய்ப்பு இருந்தால் படித்து பாருங்கள். ஒரு தாயின் மனதில் இருந்து எழுதபடும் கடிதத்தின் மொழியில் கதை அமைந்துள்ளது. தாய் தனது மகனிடம் அவளது அன்பையும் அவனுடனான தன் பிணைப்பையும் சொல்கிறாள். சில வாக்கியங்கள் நம் மனதின் ஆழம் தொடுகின்றன.. தன்னை பாராட்டும் முதல் ஆண்மகனாக தன் மகனை அவள் குறிக்கிறாள். பிரிந்த உறவின் சாயல்களை பார்க்கும் முகங்களில் எல்லாம் தேடும் பரிதவிப்பு கதையில் இழையோடுகிறது. குழந்தையுடனான வாழ்வின் சில சந்தோஷ தருணங்களை அவள் தனிமையில் நினைக்கிறாள். அவனுக்கு தெரியுமோ தெரியாதோ அவனுக்கு மறுபடியும் அந்த சம்பவங்களை நினைவுறுத்துகிறாள். இந்த கதை படிக்கும்போது எனக்கு என்
அம்மாவின் நினைவு வருகிறது. தன் நட்பு, ஆசைகள், திறமைகள், முதன்மைகள் எல்லாம் இழந்து அப்பாவுக்காகவும் கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழும் போன தலைமுறை பெண்களின் ஒரு அடையாளம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும், தினம் தொலைபேசியில் பேசும்போதும் எங்களை பற்றியே கவலைப்படும் ஒரு ஜீவன்...சில நிமிடங்கள் ஒதுக்கி அவர்கள் சொல்லும் விஷயங்களை கேட்டாலே ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியை என்னால் கவனிக்க முடிகிறது. தாய்க்கும் மகள்/மகனுக்கும் உள்ள பிணைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அது போலவே தந்தைக்கும் மகள்/மகனுக்கும் உள்ள பிணைப்பு. மனித உறவுகளின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கேள்வி குறியாகும் நம் வாழ்க்கை முறையில் இந்த கதை மனதின் ஈரம் கசிய வைக்கிறது.

No comments: