அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 12, 2006

சாக்கடைகளின் சதுரங்கம்.

நான் அரசியலில் பெறும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை எனினும் தினம் தினசரி படிக்கும் ஒரு சராசரி அரசியல் பார்வையாளன். கடந்த 2 வாரகால தமிழக அரசியல் விளையாட்டுகள் தனிமனிதனின் அடிப்படை நேர்மையை குழப்பும் சங்கதிகளாகவே உள்ளன. குறிக்கோள் பற்றி பேசிய தலைவர்கள் அடிப்படை மானத்தை கூட அடமானம் வைத்த காட்சிகள், தொகுதி பங்கீடு என்ற அரசியல் பேரத்தில் தனி ஆதாயம் மட்டுமே தேடும் அரசியல் காட்சிகள், கூட இருந்தே குழிபறிக்கும் நேர்மையற்ற தந்திரங்கள், மக்களுக்காக என்ற அரசியல் நீரோடையை வெறும் சாக்கடையாக மாற்றிவிடுகின்றன. இது இன்று நேற்று அல்ல, பல வருடங்களாகவே நடந்துவரும் யாரும் தட்டி கேட்காத கேடு கெட்ட விளையாட்டு. அரசாங்கம் என்பது இந்த கரை வேட்டிகள் அல்ல. சட்டம், ராணுவம், காவல்துறை, சிறைச்சாலை, பொது நிர்வாகம் மற்றும் பாராளுமன்றமும் சட்டமன்றமுமே அரசாங்கம். அரசியல் எனப்படுவது மக்களின் நன்மைகளுக்காக, வளர்ச்சிகாக இந்த அரசாங்களை வழிநடத்தும் ஒரு கலை. தேர்தல் எனப்படுவது அத்தகைய கலையில் தேர்ச்சி பெற்றவர்களை முன்னிறுத்தும் முயற்சி. இன்றைய அளவின் அரசியல் பற்றி புதியதாக நான் எதுவும் சொல்லபோவது இல்லை. எல்லா அரசியல் கட்சிகளும் மக்களை சினிமாவிலும், சாராயத்தில் கட்டி போடவே முயற்சி செய்கின்றன. யோசிப்பவன் புரட்சிகாரன் என முத்திரை குத்தபடுகிறான். எதிர்ப்பவன் போராளி ஆகிறான். ஜனநாயக சமுதாயத்தில் இருக்கும் மக்களே கொஞ்சம் யோசியுங்கள். உங்கள் வாழ்க்கை, உழைப்பு, அறிவு, திறமை, எதிர்காலம் எல்லாம் யாரோ சில முட்டாள்களால், சந்தர்ப்பவாதிகளால் தீர்மானிக்கபடுகிறது. நாம் அனைவரும் வெறும் கைப்பாவைகள். சேகுவாராவையும் போராளி என்கிறார்கள், சந்தர்ப்பவதாகூட்டணியில் குளிர்காயும் நம் கைதேர்ந்த அரசியல் கில்லாடிகளையும் போராளி என்கிறார்கள். யார் போராளியோ இல்லையோ, நாம் அனைவரும் ஏமாளிகள். இந்த தேசத்தின் அழிவில் நம்மையும் பொருத்திகொள்ளும் கரையான்கள்.

No comments: