அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

பாரதி..ஒரு மனிதனாக...

பரபரப்பான சமூக வாழ்க்கை...சக மனிதர்கள்.. அவர்களின் உறவுகளின் மதிப்பு அறியாத வேகமான வாழ்க்கை... எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கு கூட சொல்லி தரும் நிறுவனங்கள்... பாரதியின் இந்த கவிதை பகுதி கொஞ்சம் நம்மை நிறுத்தி யோசிக்க வைக்கிறது

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போல - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?

நின்னை சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே யின்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினை பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய வுயிராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதிதன்னை மிகத்
தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

தான் எப்படி இருக்கவேண்டும் என நினைத்திருந்த மனிதன்... ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் வாழவேண்டிய கவிதைகளை தந்த கவிஞன்... பாரதியின் கவிதைகள் பற்றிய ஆய்வு புத்தகம் ஒன்று கிடைத்திருக்கிறது... இன்னும் எழத நிறைய இருக்கிறது.. நாம் பகிர்ந்து கொள்வோம்...

No comments: