அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

புரிதலில் உண்டு தோழமை...

தோழமையில் சில வகை உண்டு. சிலருடன் நன்கு பழகிய பின் மட்டுமே தோழமை உணர்வு தோன்றுகிறது. சிலருடன் சில மணித்துளிகளில். பெரும்பாலும் ஆண் பெண் உறவுகாதலாகவோ, உடல்சார்ந்த உறவாகவோ அல்லது ரத்தபந்தமாகவோதான் எடுத்துகொள்ளபடுகிறது. ஆண் பெண் தோழமை இன்னும் சரியான பக்குவத்தில் சமுதாயத்தில் எடுத்து கொள்ளபடவில்லை. பெருநகரங்களில் இது மேலும் குழப்பம். சென்றவாரம் கள்ளகுறிச்சியில் ஒரு தோழியை சந்தித்தோம்.

நானும் என் தோழியும் இந்த புதிய தோழியை சந்திக்க முடிவு செய்தபின், அந்த பெண்ணையும் கூப்பிட்டு சொல்லி ஒரு கோவிலில் பார்க்க ஏற்பாடு ஆனது. இந்த
புதிய தோழி கைதொலைபேசி வாயிலாக அறிமுகமானவர். SMS, தொலைபேசி பேச்சு என்றே முகம் தெரியாமல் வளர்ந்த நட்பு. நான் பொதுவாக என் புதிய நட்புகளை நடைமுறை நட்புகளோடு கலந்துவிட்டு விடுவேன் - குறிப்பாக பெண் நட்புகளை - இது பல எதிர்கால குழப்பங்களை தவிர்க்கிறது. நேரில் பார்க்கலாம் என முடிவு எடுத்தபின் என் அப்பாவிடன் சொன்னேன். ஆச்சரியம் - மறுப்பு ஏதும் இல்லை. அவர்களுக்கு தெரியாமல் ஏதும் செய்யும் உத்தேசம் இல்லை - இது அடிப்படையில் உறவில் நம்பிக்கையை கொடுக்கிறது. தம்பி - அம்மா எல்லாரிடமும் விஷயம் சொல்லியாகிவிட்டது. சென்று வந்த பிறகு கேள்விகளில் வில்லங்கம் இல்லை - என்னையும் என் நட்புகளையும் மதிப்பாக எடுத்து கொள்ளும் குடும்பம் என் பாக்கியம். மெல்லிய விசாரிப்பு இருந்தது. பதில்களில் ஒரு செளகரியம்
இருந்தது. எனக்கும் என் சில தோழிகளுக்கும் உள்ள நட்பு நான் எண்ணி சந்தோஷப்படும் சில விஷயங்களில் ஒன்று. ரொம்ப நாள் பழக்கம் இல்லாமலும் சட்டென மனம் ஒன்று படும் நட்பு மிக சிலரிடமே அமைகிறது. அப்படி அமைவது பெண்ணாக இருப்பின் அதன் இழையோடு ஒரு மெல்லிய இழை போல நேர்மையான காதல் இருக்கிறது. இருவருக்கும் அவர் அவர் நிலை அறிந்து, அடுத்தவரை புரிந்து கொண்டு, தள்ளி நின்று ரசித்து, அடுத்தவர் வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்து, வாழ்வில் படிகளில் கை அணைத்து கொண்டு செல்லும் மனோபாவம் கொண்ட நட்பு அமைந்திருப்பின் - கை கொடுங்கள் நண்பரே நீங்களும் என்னை போல் ஒருவரே. இன்றைய சமுதாய அமைப்பிலும் இந்தகைய நட்பை புரிந்து கொள்ளும் வெகு சிலருக்கு இது சரி. மற்றவர்களுக்கு..? - வழக்கம் போல குதர்க்கமான கேள்விகள்தான்...

No comments: