அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

மனம் தொட்ட பயணம்

உத்திரமேரூர். ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம். பாண்டவவனம். எல்லாம் ஒரே ஊர்தான். சென்ற வாரம் இந்த சின்ன ஊருக்கு நானும் என் தோழியும் சென்றிருந்தோம். கி.பி.750ல் நந்திவர்ம பல்லவனால் 1200 வைணவ வேதம் வல்ல அந்தணர்களுக்கு தானமாக வழங்கபட்ட ஊர்.கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய பெருங்கற்கால ஈமசின்னங்கள் இவ்வூரில் காணப்படுகின்றன. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழப்பேரரசின் காலத்தில் குடவோலை முறையும் தேர்தல் வழிமுறைகளும் தேர்வு தகுதிகளும் சுயாட்சி பற்றியும் உலகுக்கு சொன்ன ஊர். இங்குள்ள எட்டாம் நூற்றாண்டு பெருமாள் கோவிலுக்கும் அருகில் உள்ள சுயம்பு முருகன் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அற்புதமான கோவில். கை தொடும் தூரத்தில் தெய்வங்கள். எல்லாம் மர சிற்பங்கள். வெறும் தைலகாப்பு மட்டும்தான். ஒரு கோவில் பிரதிநிதி எங்களுடன் வந்து கடவுள்கள் பற்றி சொன்னார். நல்ல ஆங்கில ஞானம். சிவனுக்கும் கூட நாமம் போட்டு
வைணவராக்கி இருக்கிறார்கள். அரியும் அரனும் ஒன்று என்று சொல்லும் கோவில். முருகன் கோவில் போகும் வழியில் வார சந்தை. எத்தனை நாள் ஆகிவிட்டது
இந்தகைய அனுபவத்தில். அந்தி கருத்த மாலை நேரம், நெஞ்சு நிமிர்ந்து பார்க்கவைக்கும் கோவில் கோபுரம். மெல்லிய குரலில் வைணவ மந்திர பாராயணம், தோழியோடு கோவில் பிரகாரம் சுற்றியபோது மனது மெல்லியதான திருப்தியில் நிறைந்திருந்தது. இந்த ஊரை பார்ப்போம் என்று பயண குறிப்பே இல்லை. சட்டென முடிவெடுத்தோம். ஆனால் நல்ல முடிவு. முருகன் கோவிலும் அபாரம். ஐராவதம் யானையை வாகனமாக கொண்ட சுயம்பு முருகன். கொடி கம்பம் அன்னாந்து பார்க்கையில் வானில் சப்தரிஷிமண்டலம். என்னை போலவே என் தோழிக்கும் இது அற்புதமான அனுபவம். ஊரை சுற்றி நிறைய கோவில்கள் இருக்கின்றன. பின்னர் ஒருமுறை ஒரு முழு நாள் ஒதுக்கி வரவேண்டும். சென்னையில் பரபரப்பு இல்லாத வயல்வெளிகளும் நிறைவான கோவிலும் இன்னும் சில நாட்களுக்கு மனதெல்லாம் மலர்ந்து இருக்கும். இங்கு நடக்கும் மகாபாரத கதையின் கூத்து பற்றி கேள்விபட்டு இருக்கிறேன். வாய்ப்பை ஏற்படுத்திகொண்டு நேரில் ஒருமுறையாவது பார்க்கவேண்டும். கோவில் பற்றி ஒரு புத்தகம் வாங்கியுள்ளேன். சுவரஸ்யமான தகவல்களை பின்னர் வலை பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

No comments: