அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 12, 2006

20களின் இளமையும் சமுதாயத்தின் கதறலும்...

சமீபத்திய இந்தியா டுடே 20 வயது இளைய சமுதாயத்தின் வாழ்க்கை போக்கு குறித்து கவலைபட்டு இருந்தது. தெளிவான வாழ்க்கை ஞானம், தொழில் பற்றிய குறிக்கோள்கள், காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மேல் கொள்ளும் நம்பிக்கை ஆகியவற்றில் இளைய சமுதாயத்தின் கோட்பாடுகள் பெரும்பாலும் நிலையற்றதாகவே உள்ளன என்பதை நிறைய பத்திரிக்கைகளும், இணையமும், சில சினிமாக்களும், வாழ்வில் தினமும் எதிர்கொள்ளும் சில சம்பவங்களும் சொல்லி கொண்டுதான் இருக்கின்றன, தொழில் என்று மட்டும் இன்று குறிப்புக்கு எடுத்து கொண்டால், இளைய சமுதாயம் பெரும்பாலும் பணத்தை மட்டுமே அடிப்படையாக கொள்கிறது என்று கருத்து உள்ளது. இதில் எனக்கு உடன்பாடும் உள்ளது. எனினும் கொஞ்சம் தற்போதைய இளைய சமுதாயத்தின் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்தால், பள்ளி படிப்பில் இருந்தே பணம் சம்பாரிப்பதின் அவசியம் சொல்லியே குழந்தைகள் வளர்க்கபடுகிறார்கள்.தங்களுடைய குழந்தைதன்மையை பெரும்பாலும் இழக்கிறார்கள். 10வது, 12வது படிப்புகள் அறிவுக்காக இன்றி ஒரு போட்டி மனப்பான்மையுடன் செயல்படுத்தபடுகிறது. வெற்றிகள் பெரிய அளவில் தேவையில்லாமல் கொண்டாடபடுகின்றன. இந்த முதல் மார்க் அறிவாளிகள் எல்லாம் சில வருடங்களுக்கு பின்னால் என்ன ஆனார்கள், வாழ்வில், வாழ்வியலில் என்ன நிலையில் உள்ளார்கள் என யாரும் கவலைபடுவதில்லை. கடந்த 10 வருடங்களாக முதல் மார்க் வாங்கி பத்திரிக்கைகளில் பெயர்வந்த குழந்தைகளின் இன்றைய வாழ்க்கை நிலை குறித்து யாராவது கவனித்து இருக்கிறீர்களா..? நேர்மை, மன அழுத்தம், போதுமான விளையாட்டு மற்றும் சமூக கூட்டமைப்பு இல்லாமை ஆகியவற்றில் சிக்கி சீரழிந்து, நிறைய பணம் சம்பாரிக்கும், மனதளவில் எல்லாவற்றிலும் தோல்வியை காணும் கூட்டம் ஒன்றை இனம் காண்பீர்கள். நிறுவனம்ங்களும் போட்டி போட்டு சம்பளம் கொடுக்கின்றன. பாட்டன் அப்பாவின் மொத்த சம்பளமும் 2 மாதத்தில் வாங்கும் சம்பளக்கார விளையாட்டில் இளைய சமுதாயம் கொடிகட்டி பறக்கிறது. பணத்துக்காக வாழ், எதையும் செய் என குடும்பமும், சமுதாயமும் சொல்லி சொல்லி இளைய சமுதாயத்தை வளர்க்கிறது. பின்னர், இளைய சமுதாயம் புது பணத்தின் காரணமாக இழந்த சொர்க்கங்களை தேடும் போது குய்யோ முய்யோ என குடும்பமும் சமுதாயமும் கூக்குரல் இடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

அன்பும், நேர்மையும், நல்ல வாழ்க்கை முறைகளும், அளவான முறையில் பணம் சார்ந்த வாழ்க்கையும், அறிவு சார்ந்த தேடுதலும் கொண்ட இளைய சமுதாயத்தை வளர்க்க குடும்பமும், இன்றைய சமுதாய அமைப்பும் முயற்சி கொண்டால், வருங்கால பாரதம் நிலைத்திருக்கும். இல்லையேல் இனிவரும் இளைய சமுதாயம் எல்லாம் வெறும் வான்கோழிகள்தான்.

No comments: