அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, February 26, 2006

மாறி வரும் வாழ்க்கை முறையும்...

இன்றைய வாழ்க்கை முறை அவசர யுகம். காலையில் எழுவது முதல், மறுபடி இரவு படுக்கும் வரை எங்கும் எல்லாவற்றிலும் மனம் ஒன்றிபோகாத அவசரம். விளைவு..30 வயதுக்குள் 60 வயது முதுமையும், 80 வயது வியாதிகளும். நான் சொல்வது குறிப்பாக கணிப்பொறி வல்லுனர்களை. மற்ற தொழில்களிலும் இத்தகைய வேலை பளு உண்டு எனினும் கணிப்பொறி போல 24X7 பளு கிடையாது. எல்லா உடல் நோய்களுக்கும் அடிப்படியில் மனம் மட்டுமே காரணமாகிறது. அடிப்படை ஜீரண சக்தி முதல், காம உணர்வுகள் வரை எல்லாம் மூளையால் கட்டுபாடு செய்யபடும் வேளையில், மூளைக்கு ஓய்வில்லாத அழுத்தம் இருப்பின் என்னவாகும். மிக சுலபம். மருத்துவர்கள் பிழைப்பார்கள். டென்ஷன், இதய நோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, உடலுறவு பிரச்சனைகள், மன அழுத்தம், மன நோய், சோர்வு...எல்லாவற்றிக்கும் மருத்துவர்கள் காரணமாக சொல்வது இன்றைய வாழ்க்கைமுறையின் வடிவமைப்பு. உணவு, உறக்கம், உடல் பயிற்றி, மன அமைதி இவை சரியாக அமைந்தால் இன்றுள்ள 80சதவீத நோய்களை துரத்திஅடிக்கலாம். எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் வரும் வாய்ஜால மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பலாம். ஓவியமும், இசையும் மெல்ல மெல்ல வாழ்வில் இருந்து மறைந்து இன்டெர்நெட்டும், ஷாப்பிங் மால்களும், பப்பும், டிவி-டிவிடியும் ஆக்கிரமித்து வருகின்றன. நானும் இந்த அமைப்பில் தான் இருக்கிறேன். இதில் இருந்து வெளிவர சில முயற்சிகள் எடுத்து வெற்றியும் பெற்று இருக்கிறேன் - எல்லாம் ஒத்த மனமுடைய நண்பர்களின் உதவியால். எனவே நண்பர்களே - அடிப்படி உடல்பயிற்சிகளையாவது தினசரி செய்யுங்கள் (உதா: நடை பயிற்சி, படிகளில் ஏறுதல் இறங்குதல்), உணவு சரியான நேரத்தில் கார்போகைட்ரேட் கலோரிகளை கணக்கெடுத்து உண்ணுங்கள், தயவு செய்து 7 மணி நேரமாவது தூங்குங்கள், மனதுக்கு பிடித்த தோழரோடோ , தோழியோடோ, குடும்பத்தோடோ மனம் விட்டு (வேலை விஷயங்களை தவிர்த்து) ஏதாவது பேசுங்கள். வாரம் ஒருமுறையாவது கொஞ்ச நேரமாவது இசையும் ஓவியமும் கொண்டு இருங்கள்.ஞாயிற்று கிழமைகளில் சும்மாவாது கடைவீதிகளில் நடங்கள், மனிதர்களையும் கணிப்பொறி சட்டங்களுக்கு உட்படாத வாழ்க்கையின் மறுபக்கங்களையும் கவனியுங்கள். அனாவசியமாக மருத்துவத்துக்கு செலவு செய்வதை அவசியமாக இன்று உங்களை கவனித்து கொள்ள செலவு செய்யுங்கள். நல்ல வாழ்க்கை நம்முடனே இருக்கிறது...சம்பாரிப்பதை கவனித்தல் போலவே அதனை கவனியுங்கள்

No comments: