அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, February 25, 2006

PAGE 3

சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் "PAGE 3". திரைக்கதை சொல்லபட்டிருந்த விதம் எந்த ஒரு வித்தியாசத்தையும் சொல்லவில்லை எனினும், கதையின் "One Line" பிரமாதமானது. நாம் தினசரி பத்திரிகைகளிலும், வார மாத இதழ்களிலும் பார்க்கும் பார்ட்டி கலாச்சாரத்தையும், அதன் முகமூடிக்கு பின்னால் இருக்கும் வக்கிரங்களையும் தோலுரிக்கும் கதை. கொங்கனாசென், பொமன் இரானி, அதுல் குல்கர்னி மற்றும் பலரின் பண்பட்ட நடிப்பு, மதுக்கர் பண்டார்கரின் இயல்பான இயக்கம், சமீரின் பார்ட்டி இசை திரைப்படத்துக்கு வலுவூட்டும் விஷயங்கள். கலர் கலரான பல்புகளின் அடுக்குகளுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான, குழப்பமான வயர்கள் போல, நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்க்கும் பகட்டான நாகரீகமான "Rich and Famous" சமூகத்தின் வக்கிரங்கள் திரைப்படத்தில் ஒரு பத்திரிக்கையாளரான பெண்ணின் கோணத்தில் சொல்லபடுகின்றன. நேர்மையான போலிஸ் அதிகாரி, துணிச்சலான கிரைம் ரிப்போர்ட்டர், பார்ட்டிகளில் பங்கேற்க்கும் சமூகத்தை பற்றி எழுதும் ஒரு பெண் பத்திரிக்கையாளர், இவர்களுடைய உறவு முறை சொல்லபட்டிருக்கும் விதம் அருமை. சிக்மண்ட் பிராய்ட் சொல்வது போல நாகரீகத்தின் உள்ளர்த்தம் காமம் - அதுவும் வரைமுறை தாண்டும் காமம் என்பதை திரைப்படம் மறுபடியும் சொல்கிறது. இந்தி மொழியும் ஆங்கில மொழியும் கலந்த வசனங்கள் எளிதில் புரிகின்றன. திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள், பிஸினஸ் காந்தங்கள், சமூக சேவகிகள், உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகள் இவர்கள் அனைவரது வாழ்க்கை வக்கிரங்களும் கொஞ்சம் யோசித்தால் யார் யார் குறிப்பிடுகின்றன என புரிகிறது. தமிழில் எல்லாம் இப்படி திரைப்படம் எடுத்தால் திரையரங்கை கொழுத்தி விட்டு கூடவே கொடும்பாவியும் எரிப்பார்கள். செக்ஸ் சமூகத்தில் ரத்த நாளங்களில் எப்படி பரவியுள்ளது, வாழ்வின் எல்லா முன்னேற்றங்களுக்கும் விலையாக உள்ளது - இந்த விஷயத்தில் இரு பாலரும் சமம் என்பதை திரைப்படம் சொல்லும் வேகம் அற்புதம் - நிஜம் சுடும். பத்திரிக்கையார்களின் உள்ளத்தில் இருக்கும் சமூக நேர்மையின் வேட்கையை - அதை வெளிப்படுத்த முடியாதது போல கைகள் கட்டபட்டிருப்பதை பேசுகிறது இந்த திரைப்படம். இன்று காலை பேப்பரை பிரித்தது கண்ணில் பட்ட பார்ட்டி கொண்டாட்ட புகைபடங்களை பார்த்ததும் தோன்றியது - யார் சொன்னது இந்தியா ஏழை தேசம் என்று. மேலும் இது போன்ற திரைப்படங்கள் இருப்பின் எனக்கு அறிமுகபடுத்தவும், மேலும் விவாதிக்கவும் விருப்பமிருந்தால் தொடர்ப்பு கொள்ளுங்கள்.

No comments: