அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

நடைபாதை மேதைகள்..

உங்களில் பெரும்பாலோர் சில கலைஞர்களை நடைபாதைகளில் பார்த்திருப்பீர்கள். சித்திர கலைஞர்கள், இசை கலைஞர்கள் பெறும்பாலும். என் பயணங்களில் அங்கனம் சிலரை சந்தித்து இருக்கிறேன். சிலருடன் சில மணி நேரங்கள் பேசியும் பழகிகியும் இருக்கிறேன். ஒரு முறை திருவண்ணாமலை பயணத்தில் ஒருவரை சந்தித்தேன். காவி உடையும் சிறிய ஜோல்னா பையும் மூக்கு கண்ணாடியும் அவரை எனக்கு அடையாளம் காட்டியதை விட, அவர் கையில் இருந்த மேல்நாட்டு காகிதத்திலான படம் வரையும் நோட்டு அவர்மேலான என் ஆர்வத்தை அதிகமாக்கியது. அவர் வெகுவேகமாகவும் லாவகமாகவும் படங்களை வரைந்துகொண்டு இருந்தார். நாங்கள் ஒரு சிறு பேருந்து நிலையத்தில் இருந்தோம்.அவர் வரைவதை யாரும் கவனிக்கவில்லை. நான் கொஞ்ச நேரம் பார்த்துகொண்டிருந்ததும் சட்டென நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார். பதிலுக்கு புன்னகைத்தேன். "ஒரு டீ வாங்கி தாங்களேன்.." என்றார். ஒரு நிமிட மெல்லிய அதிர்ச்சி...அவர் கேள்வி, கேட்கபட்ட விதம். பின்னர் ஒரு தெருக்கடையில் இரண்டு தேனிரும், இரண்டும் பன்னும் வாங்கிகொண்டு அவர் சாப்பிட்டு கொண்டிருக்க, நான் அவரை பார்த்து கொண்டிருந்தேன். "எங்க போறீங்க..."... "திருவண்ணாமலை..."... என்னை நான் பொதுவாக அறிமுகம் செய்து கொண்டேன். அவர் தன்னை ஒரு ஓவிய ஆசிரியர் என அறிமுகம் செய்து கொண்டார். நாங்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு பயணம் கொண்டோம். பிறகு இருவரும் பேருந்து நிலையத்தில் மெல்லிய புன்னகையுடன் பிரிந்து கொண்டோம்.

அன்று மாலை கோவிலில் இருந்து திரும்பும் போது சாலையோரம் சிலருக்கு நடுவெ அவர் மண்ணில் உட்கார்ந்து தார் ரோட்டில் அண்ணாமலையாரை வரைந்து கொண்டிருந்தார். என்னை பார்த்து புன்னகைத்தார். கொஞ்சம் காத்திருக்குமாரும், தானும் என்னோடு வருவதாகவும் சைகை காட்டினார். பின்னர் நாங்கள் விழுந்து இருந்து காசுகளை பொறுக்கி கொண்டு அருகில் உள்ள ஒரு தேனீர் விடுதியில் அமர்ந்து இருந்த போது அவர் பேசினார்...என் முகத்தில் இருந்தே என் கேள்வி அவருக்கு புரிந்து இருக்கவேண்டும். கலைஞர்கள் சபிக்கபட்டவர்கள்...பொருளாதார ரீதியாக..என்பது அவர் கருத்தாக இருந்தது. வெகுசிலரே கலைஞ்சராக இருந்து வாழ்வில் மேம்படுகிறார்கள் எனவும், பெரும்பாலானவர்கள் பொருளாதார தடைகளால் கலையை வாழ்வில் பின்னுக்கு தள்ளுகிறார்கள் என்றும் சொன்னார். நான் முயற்சி பற்றியும் சரியான ஊடகங்களில் தேர்வு பற்றியும் வாதிட அவர் விதி என்பது எதையும் தீர்மானிக்கின்றது என்றார். பின்னர் கோவில்லில் ஒரு சிறுவனை சந்தித்தோம்.வெகு அழகாக சிற்பங்களை சித்திரமாக தீட்டியிருந்தான். அவன் பள்ளியின் விலாசமும் அவன் விலாசமும் வாங்கி கொண்டு, அவனை பள்ளியில் வந்து சந்திப்பதாக சொல்லி, தெருவில் திரட்டிய பணத்தை அவனுக்கு கொடுத்துவிட்டார் அவர்.

பின்னர், அவ்வையாரின் கோவில் உள்ள உத்தமசோழபுரத்துக்கு கூட்டி சென்றார். நிறைய இடங்களில் அவர் தெருவில் படம் வரைந்து காசு திரட்டினார். பிறகு அந்த காசை பிச்சைகாரர்களுக்கும், அவர் போலவே தெருவில் படம் வரையும் பாட்டுபாடும் சிலருக்கும் பிரித்து கொடுத்தார். எனக்கு நீங்கள் நண்பரானதால் நீங்கள்தான் எனக்கு செலவு செய்யவேண்டும் என்று புன்னகைத்தார்.நான் மறுக்கவில்லை. பதிலாக அவர் வரைந்து முடித்திருந்த சில படங்களை கேட்டேன். நானும் சில கோட்டோவியங்களை வரைந்தேன். தேர்ந்த ஒரு வல்லுனர் போல சில யோசனைகளை சொன்னார்.

பின்னர் ஒரு இரவில் நாங்கள் பேருந்துகளில் எதிர் எதிர் திசையில் பிரிந்தோம். பின்னர் அவரை பார்பதற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் கொடுத்த விலாசத்துக்கு எழுதிய கடிததுக்கும் பதில் இல்லை. அவர் வரைந்த சில படங்கள் மட்டுமே என்னிடம் உள்ளது. பின்னர் ஒரு முறை சேலத்தில் ஒரு நல்ல இசைகலைஞ்சரை சந்தித்தேன். அவரும் அவர் குழுவினரும் உடல் ஊனமுற்றவர்கள். அற்புதமான குரல் வளம். சில பாடல்களை சிறு கேசட்ரெக்காடரில் பதிவு செய்து என் நண்பர் வைத்திருந்தார். அவர் பற்றியும் எழுத வேண்டும். அடுத்தமுறை எழுதுகிறேன்.இவர்களின் வாழ்க்கை எப்படிபட்டது. என்ன எதிர்பார்ப்பு...என்ன கனவு. வாழ்வின் அடிநாதமான நம்பிக்கையும் சில வாழ்வியல் அனுபவங்களை மட்டுமே அவர்கள் கொண்டுள்ளார்கள். என் தோழன் சீனிவாசனின் தந்தை ஒரு முறை திருவரங்கம் சென்றிருந்த போது சொன்னார்... தெருவில் வரைபவர்களும், தெருவில் பாடுபவர்களும் தேவ கலைஞ்சர்களால் சபிக்கபட்டப்ட்டவர்கள் என.. அற்புதமான கலை.. ஆனால் அதனை வெல்லும் வறுமை...சில சாபங்கள் நிஜம்தான் போலும்.

1 comment:

anu said...

"Payanangalil!" thalayangathukku inayana thangalathu natai pathai payanthin vimarsanam virumpathakkthu .........

nataipathai methaikal palar suya ninaivintri vazhum sokam pala naan kandathundu, appothu ninaithathundu avarkalodu urayada, ullnattu kalacharam ennai thadukka, oru pennaka irunthu ennal urayada mudinthathillai, athai thangal seithathodallamal athai pakirnthamaikku nantri......