அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

வாசல்படிகள்...

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு கட்டுரையில் வாசல்படிகள் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அவை வெளிஉலகத்துக்கு முதல் படிகள் என்று அவர் கட்டுரை சொல்லியது. ஆம்.. எல்லா வீட்டு வாசல்படிகளும் நிறைய கதைகளை கொண்டு இருக்கின்றன. உலகம் மற்றும் மனிதர் அறிமுகங்களின் அரங்கேற்றும் தளமாக பெறும்பாலும் வாசலபடிகள் விளங்குகின்றன. இளம் வயதில் வாசம்படிகள் கதை சொல்லும் படிகளாக இருந்திருக்கின்றன. பாட்டி வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு எனக்கும் தெருபிள்ளைகளுக்கும் கதை சொல்லியிருக்கிறார்கள். நடைவண்டி தையல்காரன், காய்கறிக்கார அம்மாள், வயதான முடமான பிச்சைகாரர்கள், வயதானாளும் பெனாயில் பாட்டில் விற்கும் முதியவர்கள், வளையல்காரர்கள், துணியும் ஜமுக்காளமும் கொண்டுவரும் வியாபாரிகள், மீன்காரர், ஐஸ்வண்டிகாரர் மற்றும் பலர் என பலதரபட்ட மக்களையும் அறிமுகம் செய்து வைப்பது வாசல்படிகள்தான். நாங்கள் வசித்த வீட்டின் வாசல்படிகள் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அவற்றின் சம்பவங்கள் ஞாபகம் இருக்கின்றன. சறுக்கு மரமோடு கூடிய வாசல்படிகள், செங்கல் மட்டுமே கொண்ட படிகள், சிமெண்ட் படிகள், யானை இரண்டு பக்கமும் கொண்ட படிகள் என பலவகையான படிகள் கோலங்களால் பொதுவாக அலங்காரம் செய்யபடுவதுண்டு. சில வீட்டு வாசல்களின் பூந்தொட்டிகள் உண்டு. மர இலைகளால் வாசல்படிகள் நனைந்திருக்கும் காலங்களை நினைக்கிறேன். வாசல் படிகள் சில மரணங்களையும் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன. அவற்றின் பிறகு தனியாக வாசல்படிகளில் அமர்வதை தவிர்த்திருக்கிறேன். சில வீடுகளில் வாசல்படிகள் வெறும் செருப்பு அடுக்கும் படிகளாகவே இருக்கின்றன... வீட்டின் வாழ்க்கை படிகளில் தொடங்குகிறது...மனிதர்கள் போலவே ஞாபகங்கள் வாசல்களுக்கும் உண்டு. வாசல்களின் ஞாபகம் மனிதர்களுக்கும் வேண்டும்.

No comments: