அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

மாணவர்களது எதிர்கால எண்ணங்களில்...

என்ன படிக்கிறீங்க...? எஞ்சினீரிங்... கம்யூட்டர்...ஜாவா...மைக்ரோசாப்ட் .நெட்... பொதுவில் எல்லா மாணவர்களுக்கும் ஒரே எண்ணம் சமூகத்தாலும் குடும்பத்தாலும் வளர்க்கபடுகிறது. அது பணம் சம்பாரித்தல். இது படித்தால் பணம் அதிகம் கிடைக்குமா...அது படித்தால் நிறைய பணம் கிடைக்கும் வேலை கிடைக்குமா.. இது எல்லாம் படித்தால் வெளிநாடு போகலாமா.. அது எல்லாம் படித்தால் பெரிய சம்பள பெண் கிடக்குமா..கேள்விகள்...கேள்விகள்...

அப்துல்கலாம் ஒரு முறை சொன்னார்... நிறைய விஞ்யானிகளை தேசம் எதிர்பார்க்கிறது என்று... ஒட்டுமொத்த பூமியின் தேவைப்படுகின்ற பொறியியலாலர்கள் ஒரு பக்கம் இருக்க... நம் நாடு மும்மடங்கு பொறியியலாலர்களை ஒவ்வொரு வருடமும் உருவாக்கி கொண்டிருக்குறது. அறிவியல் சார்ந்த படிப்பை முடித்தவர்களும் டெக்னிகல் பக்கம் சாய்வதற்கு சம்பளபணம் ஒரு காரணமாகிறது. கணிதமும், வேதியலும், மற்றும் அறிவியலும் படித்தவர்கள் இந்தியாவில் டெக்னிக்கல் வேலை செய்து கொண்டிருக்க, வெளிநாடுகளில் டெக்னிகல் வேலைகள் குறைத்து அறிவியலை வளர்க்கிறார்கள். மேலும் 250 வகையான டெக்னிகல் அல்லாத வேலைகள் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் அறிமுகபடுத்தபட்டு இருக்கின்றன. அவற்றில் மன அழுத்தம் கிடையாது. போதுமான சம்பளம் உண்டு (அளவுக்கு மீறி கிடையாது... நிறைய பேர் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதை பெருநகரங்களில் காண்கிறேன்). நல்ல வாழ்க்கை முறை உண்டு. குடும்பத்துடன் செலவிட நேரம் உண்டு. நல்ல உணவும் உடல் உழைப்பும் ஆரோக்கியமும் இருக்கிறது. வாழ்க்கையின் உண்மையை அனுபவிக்கிறார்கள். அங்கேயும் இங்கேயும் இது எல்லாம் இல்லாமல் இருப்பவர்கள் நம் இந்திய தேச உழைப்பாளிகள்தான். மூளையை மட்டுமே முதலீடாக்கும் அறிவாளிகள்தான்... கல்விசார்ந்த நண்பர்கள் இருந்தால் இது பற்றி மேலும் விவாதிக்க விரும்புகிறேன். நம் தேசத்தில் மேலும் டெக்னிகல் சாராத வேலை வாய்ப்புகளைபற்றி சில கல்லூரிகளில் பேசிய போது நல்ல வரவேற்ப்பு இருந்தது. வெகு அரிதாக சில மாணவர்கள் இத்தகைய வேலை வாய்ப்புகளை விரும்புகிறார்கள்... மதிப்புகளை தெரிய வைப்பது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது.

No comments: