அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

கலாச்சாரம் - ஒரு குறைப்பார்வை

சென்ற மாதங்களில் சில தோழிகளின் அறிமுகங்கள் கிடைத்தன. நிச்சயம் இனிய சந்திப்புகள் இல்லை. கலாச்சாரம் பற்றிய என் கருத்துகளை பற்றிய கண்டனங்களுடன் என்னை தொடர்ப்பு கொண்டார்கள். அடிப்படையின் அவர்களுக்கு நன்றி. உங்களுடன் பேசிய பிறகு நாம் இருவருமே நம் இருவரது கருத்துகளை முழுமையாக ஒத்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொண்டோம். எனினும் இருவருக்குமே அடுத்தவரது எண்ணங்களில் அர்த்தம் புரிந்தது. தெளிவான கண்டனங்களும் விவாதங்களும் நம்மை, நம் கருத்துகளை முழுமையாக்குகின்றன. மேலும் சில என் கருத்துகளை இம்முறை எழுதுகிறேன்.

நான் கலாச்சாரம் என்று சொல்வது உடையலங்காரங்கள் அல்ல. பாலுணர்வு அல்ல, கற்பு அல்ல. நான் சொல்லும் கலாச்சாரம் தனி மனித மனம் சம்பந்தபட்டது. வாழ்வியல் பற்றியது. உயிர்களிடத்தில் பழகும் மனிதத்துவம் பற்றியது. அடிப்படை ஒழுக்கம் பற்றியது. சமுதாயத்தில் அல்லது சமுதாயம் என்று சொல்லபடும் அமைப்பில் உங்களின் இருத்தல் பற்றியது. காதலும் ஆன்மீகமும் போல ஒரு உணர்வு சாந்தது.

பெண்கவிஞர்கள் ஒரு கலாச்சார அல்லது சமூக மற்றும் தார்மீக அதிர்வுக்காக பாலுணர்வு விஷயங்களை கதைகளிலும் கவிதைகளிலும் கையாள்கிறார்கள். பொதுவாக இந்த விஷயங்கள் சுலபமாக கவனிக்கபடுபவை. அதிலும் பெண்கள் இதுகுறித்து பேசும் போது கவனித்தலின் கூர்மை அதிகமாகிறது. இது தவறு என்று வாதிடபோவதில்லை நான். ஆண்டாள் சொல்லாததை யாரும் சொல்ல போவதில்லை. மகடுஉ முன்னிலை / பெண்புலவர் களஞ்சியம் - புத்தகமும் நிறைய சொல்லியிருக்கிறது. பெண்கள் தங்கள் பார்வையில் அணுகும் விஷயங்களில் ஆண்களை விட உள்நோக்கு பார்வையும் வலியும் சுகமும் கலந்து இருக்கின்றன. வரவேற்றபட வேண்டிய விஷயம்...எனினும் சமுதாயம் எனப்படும் அமைப்பு தனது பார்வையை தெளிவுபடுத்தி கொள்ளவில்லை. "இவளுக்கு ரொம்பத்தான்...." எனப்படும் வசனங்களை சுலபமாக சொல்கிறது. இது மாறவேண்டும் என்றால் உங்கள் குரலில் மேலும் அதிர்வும், வேகமும் வேண்டும். அடிப்படையான ஒற்றுமை உணர்வு வெறும் சிறு போராட்டங்களுக்கு மட்டுமே பயன்படாமல் மேலும் சிறு கூட்டங்களையும், வாசிப்பு முயற்சிகளையும் மேம்படுத்த பயன்படவேண்டும். கருத்துகளை கொண்ட ஆனால் எழுத்துகளில் வெளிப்படுத்தாத பெண்கள் சமூகத்தில் இன்னும் நிறைய உண்டு. அவர்களை சந்தியுங்கள். அவர்களின் பார்வையில் உலகத்தை காணுங்கள். அவர்களை உங்கள் கூட்டங்களில் பங்கேற்ற வையுங்கள். இலக்கியம் என்பது வெறும் எழுத்து மாயாஜாலம் அல்ல... அது மனதில் குரல், மக்களின் குரல், சமூகத்தின் குரல், உணர்வுகள் குரல் என்பதை மற்ற அமைப்புகளுக்கு எடுத்துகாட்டுங்கள். குறுகிய வட்டத்துக்குள் நிற்க்காமல், மேலும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. உங்கள் பார்வைகள் அவற்றையும் கவனிக்கட்டும்.

பாரதி சொல்வது போல் - கற்பு என்பது இருப்பின் அதை ஆணுக்கும் பெண்ணும் பொதுவில் வைப்போம். கற்பு என்பது மனம் சார்ந்த உணர்வு என்பது என் கருத்து. உடல் சார்ந்த உறவில் கற்பு என்பது முன்னிலை படுத்தபடவில்லை. அதில் உணர்வு சார்ந்த ஒரு பந்தம் முன்னிலைபடுத்தபடுகிறது. இது நம் இருவருமே ஒத்து கொண்ட ஒரு கருத்து. எனினும் இது பற்றிய ஆண்களின் விவாதங்கள் பலவற்றிலும் பெண்களின் ஒழுக்கம் சார்ந்த விஷயமாக உடல் சார்ந்த விஷயமாக கற்பு கருதபடுகிறது. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் உறவு சாகசமாகவும், பெண் கொள்ளும் உறவு வேசித்தனமாகவும் சித்தரிக்கபடுகிறது. பெண் பற்றிய ஆணின் ரசனை உடல் அங்கங்களை கொண்டே அளவிடபடுகிறது. செக்ஸ் என்பது பொதுவில் பேசதகாத ஆனால், அனைவருக்கும் அடுத்தவரது படுக்கையறையில் எட்டிபார்க்கும் சுகம்தரும் விஷயமாகவே கருதப்படுகிறது. சமீபத்தில்படித்த சிக்மண்ட் பிராய்ட் கட்டுரைகளை தமிழ்படுத்தி பதிவு செய்ய உத்தேசித்து இருக்கிறேன்..

மேலும் இது பற்றி விவாதிக்கலாம்... உங்களின் கருத்துகளுடன்...

No comments: