அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

எழுதபடாத கதைகள்...

கதைகள் படிப்பவர்களுக்கு இயல்பாகவே எழுதவேண்டும் என்ற ஆர்வமும் வருவதுண்டு. எழுத கருத்துக்கள் வேண்டும். கல்லூரிகாலங்களில் மாணவ அமைப்பின் புரட்சிகருத்துகளும் காதலும் மட்டுமே எழுத தொடங்கிய விஷயங்களாக இருந்தன. சினிமா கதைகள் படிக்கவும் எழுதவும் தொடங்கிய போதும் காதல் மட்டுமே பிரதானமாக சொல்லிகொடுக்கபட்டது. ரொம்பவும் விதிவிலக்காக சில திரைப்படங்கள் இருந்ததை மறுக்கமுடியாது. கதாநாயகர்களும் கதாநாயகிகளும் எல்லா கதைகளிலும் உண்டு. சாகசங்கள் செய்வார்கள், காதல் செய்வார்கள், வாழ்வில் ஏற்ற இறக்கங்களில் பயணிப்பார்கள், உலகம் புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள். நான் படித்த அதிக பட்ச கதைகளில் இவை எல்லாம் உண்டு. நானும் கொஞ்சம் எழுத தீர்மானித்து இருக்கிறேன். என்னை சுற்றியுள்ள உண்மையான கதாநாயகன் கதாநாயகி பற்றி. என் அப்பாவும் அம்மாவும் தவிர என் கதாநாயகனும் கதாநாயகியும் யார். அவர்கள் வாழ்க்கையில் வாழ்ந்து வந்ததை யார் பதிவு செய்வது. சொல்லபோனால் இது மகன் அல்லது மகளின் கடமை. நமக்காகவே வாழ்ந்து அம்மா அப்பா பற்றி நம்மில் எத்துனை பேருக்கு எல்லாம் தெரியும்? அவர்களின் இளம்வயது, பள்ளி கூடம், வாத்தியார்கள், ஆர்வங்கள், நட்புகள், வாழ்க்கை, சுகங்கள், துக்கங்கள், சொந்தங்கள், சிந்தனைகள், பார்வைகள், கருத்துகள் எல்லாம் எங்கே பதிவு செய்யபடுகின்றன..? ஒரு முழுமையான நாவலுக்கு ஏற்ற வாழ்க்கையை அல்லவா அவர்கள் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள்... அடுத்த தலைமுறைக்கு இவர்களின் வாழ்க்கை பாடங்கள். தலைமுறை படிக்குமோ இல்லையோ... ஒருவகையில் நம்பிக்கைதரும் நிஜங்களை கொண்ட வாழ்க்கையை படிக்கும்போது அது தரும் தைரியம் தனி. கிராமத்து கோவில் தேவதைகள் பார்த்ததுண்டோ..? எல்லா கோவில் தெய்வங்களும் ஒரு வகையில் அங்கே அந்த பகுதியில் வாழ்ந்து மறைந்த மனிதர்கள்தான்... அவர்களின் நினைவாகவே அவர்கள் தெய்வங்களாக அங்கே பிரதாபிக்கபட்டு இருக்கிறார்கள். ஆன்மீகங்கள் மாதாவையும் பிதாவையும் தெய்வமாக கொள்கின்றன. அவர்களை பற்றிய பதிவுகள் மிக அவசியம் என்றே நினைக்கிறேன்.

No comments: