அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, January 21, 2006

செக்ஸ் - சட்டத்துக்குள் வட்டங்கள்...

எல்டன் ஜான் - சர்ச்சைக்குள்ளான ஒரு இசைகலைஞன். என்ன சர்ச்சை... என்று கேட்பவர்களுக்காக... இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்... அதிலென்ன சர்ச்சை..? அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு ஆணை. ஆம். அது ஒரு ஓரின சேர்க்கை திருமணம். இந்த வார The Week - Jan 22 2006" இதழை பாருங்கள். அதில் ஷோபாடே யின் கட்டுரை ஒன்று இந்த திருமணம் பற்றி பேசியுள்ளது. திருமணம் என்பது ஒரு வகையான பந்தம் என்ற நிலை மாறி ஒரு சொத்து சேர்க்கும் வழிமுறையாகவே உள்ளதாக கருதபடுகிறது. உணர்வுகளுக்கு ஆதரவு தரும் சில அமைப்புகள் இந்தியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கின்றன. லெஸ்பியன் மற்றும் கே உறவுகளுக்கு ஆதரவுதரும், அந்த உணர்வுள்ளவர்களுடைய சமூக பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் இந்தியாவில் சில அமைப்புகள் கடந்த 3 வருடங்களில் தொடங்க்கபட்டுள்ளன. இந்தியாடுடே, காமசூத்திரா ஆகிய அமைப்புகளின் கருத்துகணிப்புகளிலும் ஓரினசேர்க்கையாளர்கள் மெதுவாக தங்களை இருத்தலை காண்பிக்க தொடங்கியுள்ளார்கள். மூன்றாம் பாலின நண்பர்களும் மெல்ல தங்கள் சமூக இருத்தலை காண்பிக்கின்றார்கள். இந்திய அரசியலைமைப்பு மற்றும் சட்டம் தன் ஸரத்துகளில் உடலுறவு என்பது யோனியும் லிங்கமும் இணைவதே என்பதை திட்டவட்டமாகவும், மற்ற உறவுமுறைகள் இயற்க்கைக்கு ஒவ்வாததாகவுமே கருதுகிறது(எதிரொலிக்கும் கரவொலிகள் / அரவாணிகளும் மனிதர்களே எனும் புத்தகம்). பல மேலை நாடுகளுமே இவ்வாறு கருதுகின்றன. காமசூத்திரா நூல் தற்காலங்களில் கொஞ்சம் மாற்றபட்டு உள்ளதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள். காமசூத்திரா புத்தகம் இந்திய சட்டங்களுக்கு ஏற்ப வெட்டி மாற்றபட்டு உள்ளது. இதனை ஒரு நூலகர் என்னிடம் சொன்னார். அதுவும் தவிர கஜுராகோ சிற்பங்களில் சட்டம் சொல்லும் ஒவ்வாத உடலுறவுகள் புணையபட்டிருப்பதை உதாரணமாக்கினார். இந்தியாவின் கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் காமம் என்பதை பல்வேறு அர்த்தங்களில் பார்க்க முடிகிறது. ஓஷோ சொல்வது போல ஆன்மீகமாகவும், மெல்லிய இசை போன்ற உணர்வாகவும், மேலும் மேலோட்டமான உறவு சார் வழிமுறைகளாகவும் பார்க்க முடிகிறது. இதுதான் முறைபடுத்தபட்ட காமம் என்று எங்கனம் சொல்வார்கள்...? எதிரொலிக்கும் கரவொலிகள் / அரவாணிகளும் மனிதர்களே எனும் புத்தகம் கேட்கும் கேள்விகளில் மூன்றாம் பாலின மக்களின் செக்ஸ் உணர்வுகள் கேலிக்குறியதாக சமூகத்தில் சொல்லபடுவதை எடுத்துகாட்டுகின்றன. இங்கே இந்தியாவில் எல்லாம் உண்டு... எல்லா வகை ஆசாபாசங்களும் மக்களிடையே கையாளப்டுகின்றன. எனினும் தன்னைமட்டும் செக்ஸ் ஆசையில்லாத புனிதர்களாக வட்டங்களில் அமைத்து கொள்வதை எல்லாரும் விரும்புகிறார்கள். அடுத்தவரது வாழ்க்கை மட்டுமே விவாதிக்கபடுகிறது. சமீபத்தில் "Fire" என்னும் திரைப்படம் பற்றிய ஒரு சிறு விவாதத்தில் ஒரு நண்பர் சொன்னார்... "நான் இந்த உறவு முறையை ஏற்று கொள்ள போவதில்லை... இப்படி பெண்கள் பெண்களிடன் சுகம் காண தொடங்கிவிட்டால்.. அப்புறம்... ஆண்கள் எங்கே போவது... " ஆக... அடிப்படையில் உனக்கு உறவு கொள்ள பெண் இல்லாமல் போய்விடுவாள் என்ற பயமும், அது தொடர்பான கவலையுமே இத்தகைய எதிர்ப்பை கிளப்பிகிறது. இந்த கருத்து "Fire" திரைப்ப்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரும்பாலரிடம் இருந்ததான் இந்தியாடுடேயின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் சொன்னார். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு வெறும் உடல் இச்சை... ஓரின சேர்க்கையாளர்கள் உணர்வுகளின் ஒன்றுபடுதல் மூலமாகவே சேர்கிறார்கள்... மூன்றாம் பாலின மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளும் அப்படித்தான் என்று மின்னஞ்சல் மூலமான ஒரு இணைய குழுமத்தில் ஒருவர் எழுதியிருக்கிறார். ஆயினும் நிறைய ஏமாற்று வேலைகள் நடக்கிறது. இதனை பயன்படுத்தி "Black Mail" செய்வது... போலியான முகவரிகளில் ஆட்களை வரவைத்து கேவலப்படுத்துவது... போன்ற வேலைகளினால் யாருக்கும் எதிர்பாலினர்மேல் மேலும் வெறுப்பு வருமேயன்றி... நீங்கள் எதிர்பார்க்கும் சட்டத்துக்கு உட்பட்ட ஆர்வம் வராது.

No comments: