அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, March 16, 2009

தெய்வத்தால் ஆகாதெனினும்...

மூன்று வருடத்துக்கு முன்னால் மாதம் கிட்டதட்ட நான்கு லட்சம் சம்பளம். பொறியியல் படிப்பு. டெட்ராய்ட் நகரில் மென்பொருள் வேலை. உங்களில் அடுத்த இலக்கு எதுவாக இருக்கும்... நீங்கள் யோசிக்கும் அதே வினாடியில் செந்தில்குமார் என்ற இந்த நபர் வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு வந்தார். கிராமம் கிராமமாக அலைந்தார். தேனூர் என்ற ஊரில் ஒரு சிறிய மருத்துவமனை, ஒரு கணிப்பொறி அமைப்பு, குழந்தைகளுக்காக ஒரு மரத்தடி பாடசாலை - இத்தனையும் கைகாசில். இது வரை நாற்பது லட்சம் செலவாகி இருக்கிறது. மலிவான குழைவான வேஷ்டி - சட்டை, கேரியர் சைக்கிள், சாப்பாட்டு தூக்கு பாத்திரம், மஞ்சம் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி, ஒழுங்குபடுத்தபடாத தாடி மீசை முகம் - இவர் ஒன்றும் பெரிய குடும்ப வாரிசு கிடையாது. சாதாரண குடும்ப பிண்ணனி. "உலக வரலாறு படிப்பதை விட உங்களை சுற்றியுள்ள கிராமங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கல்வி கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த கல்வியை சொல்வோம். இயற்கை வேளாண்மை செய்கிறோம். 3000 மரங்கள் நட்டுள்ளோம். அரசாங்க பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரி நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் இன்னும் நிறைய செய்யலாம்." என்கிறார். "நல்லா படிச்சுட்டு நல்ல வேலைல இருக்கும் போதே 'இப்படி ஆயிட்டாரே' - அவருக்கு பொண்ணு குடுத்து என்ன பண்றது' என சொந்தங்கள் சொல்வதாக அவர் அம்மா கவலைபடுகிறார்.

No comments: