அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, March 16, 2009

காசேதான் கடவுளடா...

மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 35 லட்சம் வரைதான் செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது போதாது என கிட்டதட்ட எல்லா வேட்பாளர்களும் புகார் செய்துள்ளார்களாம். செலவுகளை கண்காணிக்க தனி பார்வையாளர்களும், வருமான வரித்துறையினரும் நியமிக்கபட உள்ளார்கள். கடந்த 20004 தேர்தலை விட இம்முறை 50% விலைவாசி உயர்ந்துவிட்டதால் இந்த கட்டுபாடு தளர்த்தபட வேண்டும் என பலரும் கேட்டுள்ளனர். போஸ்டர், வாகனம், கொடி, பிளக்ஸ் போர்ட், தேர்தல் அலுவலக செலவு என கைமீறுமாம் செலவு. உண்மையாக மக்களை சந்திக்கவும், அவர்களுடன் மேம்பாடு குறித்து விவாதிக்கவும், தொகுதிக்கு நிஜமாக நல்லது செய்திருப்பினும் - நல்ல கருத்து சார்ந்த ஒற்றுமை உணர்வு மக்களோடு இருப்பினும் - இந்த பணம் ரொம்பவே அதிகம். பெரும்பாலான இந்த செலவுகள் ஆடம்பர விளம்பரங்களே. கொஞ்சம் ஓட்டுக்கு பணமும் லஞ்ச பொருள்களுமாக விளையாடும். இந்த தேர்தலை வைத்து கட்சிகார அடிமைகள் கொஞ்சம் சம்பாதிப்பார்கள். சாராயமும் கைகலப்பும் இருக்கும். எங்கு கேட்டாலும் காசு இல்லை என்றும் - பொருளாதார தேக்கம் என்றும் சொல்லபடும் தேசத்தில் - இத்தனை பணம் எங்கிருந்து அய்யா வருகிறது. இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சியாம். இதற்கு எல்லா அரிதார முதலைகளும் 2010, 2011 என்று குறிவைத்து காய்நகர்த்துகிறார்கள். மொத்தத்தில் உருப்படியாக சம்பாரிப்பவன் ஏமாளி - மற்றவன் எல்லாம் பிழைக்க தெரிந்தவன்...

No comments: