அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, March 16, 2009

சென்னை சங்கமம் 2009

ஒரு நல்ல கிராமிய விழாவாகவே நடந்தது இந்த வருட "சென்னை சங்கமம்". நிறைய கூட்டம், நிறைய கலைஞர்கள் - நிறைய "கலைஞர்" துதிகள். ரேவதிக்கு அதிக ஆர்வமில்லை என கொள்ளமுடியாது - அவளுக்கு இது எல்லாம் புதியதாகபடவில்லை. கிராமத்தில் நிறைய இதுபோல பார்த்துள்ளதால் அதிக கவனம் இல்லை. நான் மட்டும் ஓடி ஓடி - அவளையும் இழுத்து கொண்டு ஓடி ஓடி - ஒளிப்படம் எடுத்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கவனிக்க முடிந்தது - மற்ற நாட்களில் அலுவலக நெருக்கடி. புதிய திண்பண்டங்கள் - பெரும்பாலும் கிராமத்து உணர்வை கொண்ட உணவுகளை விற்க்கும் கையேந்தி வண்டிகளை சுற்றியும், 5 நட்சத்திர 'கரண்டி 50ரூபாய்' உணவுக்குமே கூட்டம் இருந்தது. கமர்கட்டும், தேங்காய் பருப்பியும் வாங்கினோம். அப்புறம் ஜிகர்தண்டா. இஞ்சி மொரப்பா... ஆடும் கலைஞர்களை விடவும், அடிக்கும் தாளத்துக்கு ஆடும் நம் சென்னை இளவட்டங்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. வெங்கடநாராயணா சாலையை விட பெசன்ட்நகர் கடற்கரை பரவாயில்லை - கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொண்டார்கள். சில கூத்துகளில் இரட்டை அர்த்தம் - ஆர்பரிக்கும் கூட்டம் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கத்தினார்கள். கத்த கத்த இரட்டை அர்த்தம் அதிகமானது. அதிலும் கானா பாட்டு பாடிய அம்மணி குலுக்கிய குலுக்கலில் - கூட்டம் சும்மா அதிருதுல்ல.. உண்மையாகவே அற்புதமான கலைகள் காண கிடைத்தையும் மறுக்க முடியாது. பொள்ளாச்சியில் இருந்து ஒரு தாள குழுவினர், திருவண்ணாமலையில் இருந்து ஒரு கூத்து நாடக குழு, ஒரு பஞ்சாபி நடன குழு மற்றும் பலர் மிகவும் அழகாக செய்தார்கள். கிளி ஜோஸ்யம், குறி கேட்பவர்கள் எல்லாம் இருந்தார்கள். புது மனைவியை கூட்டி போய் கிளி ஜோஸ்யம் பார்க்க போனால் அங்கே சனி விளையாடியது - அவன் ஒரு கூண்டில் இருந்து எலியை வரவைத்தான். அது ஒரு முருகன் படத்தை எடுத்து கொடுத்தது. அவன் கூசாமல் - "உனக்கு ரெண்டு பொண்டாட்டி" என்று சொல்லி விட்டான். ரேவதியும் நானும் சிரித்து விட்டு போடா வெண்ணை என்று காசு கொடுக்காமல் வந்து விட்டோம்.

No comments: