அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, March 25, 2009

நாலு மூலை...

அய்யா ரா.கி.ரங்கராஜன் என் புத்தக உலகுக்கு முதன் முதலில் அறிமுகமானது நக்கீரன் பதிப்பகத்தார் வெளியிட்ட 'நீங்களும் முதல்வராகலாம்' புத்தகத்தின் மூலம். மொழிபெயர்ப்பு கட்டுரைகளாக நக்கீரனில் வெளிவந்து இருந்தாலும் புத்தகமாக படிக்கும்போது மிகவும் பயனுள்ளது - அதுவும் என் தொழிலுக்கு எல்லாம் ரொம்ப... நிறைய அலுவலக குழு விவாதங்களில் இந்த புத்தகத்தில் சொல்லபட்ட கருத்துகளை உபயோகபடுத்தி இருக்கிறேன்... 'நான் கிருஷ்ணதேவராயன்' என்ற புத்தகம் - தன் முதன்மைப்படுத்தபட்ட கதாபாத்திர அமைப்பில் கதை சொல்லும் பாங்கில் அமைந்த அற்புதமான சரித்திர புதினம்.. மற்றபடி இவர் எழுதிய புத்தகங்களை அதிகம் படித்ததில்லை - கிடைக்கவில்லை என்பதும் உண்மை. சில நேரங்களில் ரா.கி.ராவையும் கி.ராவை குழப்பி கொண்ட கூத்தெல்லாம் நடந்ததுண்டு.. அய்யா நிறைய எழுதியிருக்கிறார் என்பதை சமீபகாலமாகதான் கண்டு கொண்டேன் - புத்தகங்களை திரட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. குமுதத்தில் இவருடைய நிறைய பங்களிப்பு இருக்கிறது..சினிமா பதிவுகள், கிரைம், திகில் கதைகள், மற்றும் நகைச்சுவை கலந்த சமூக விமர்ச்சனங்கள் என இவர் தளம் மிகவும் விரிந்தது. கமல், கிரேஸி, எஸ்.வி.சேகர் ஆகியோருகெல்லாம் குரு - நம் சுஜாதா செல்லமாக எழுத்து 'ராட்சன்' என்று சொல்வாராம்.. மகாநதி மற்றும் பல படங்களை உருவாக்க ரா.கியின் நட்பு பெரிதும் உதவியிருப்பதாக கமல் சொல்லியிருக்கிறார். 'அவன்' என்ற பெயரில் சுய சரிதையும் எழுதியிருக்கிறார். இந்த பதிவு - மாம்பலம் டைம்ஸ் என்ற சென்னையில் வெளிவரும் இலவச ஏரியா பத்திரிக்கையில் இவர் எழுதிவரும் 'நாலு மூலை' என்ற பத்தி பற்றி... (அண்ணாநகர் டைம்ஸிலும் வருகிறது போலும்..!!!), மிக இயல்பான நடையில், மெல்லிய நகைச்சுவையோடு, சுவை குன்றாமல், நடைமுறை வாழ்க்கையின் சம்பவங்களை நாம் எல்லாரும் பார்க்கும் பார்வையிலேயே பார்த்து - பகிர்ந்து கொள்கிறார். மிகவும் நேர்மையான ஒப்புக்கொள்ளும் பாங்கும், சுயமாக கேலி செய்து கொள்ளும் கதாபாத்திர அமைப்பும் ரசிக்கும் வகையில் ரொம்ப உசத்தி - 80 வயதுக்கு மேல் இருக்கும் அவர் எழுத்தில் தெரியும் குறும்பும் வேகமும் படித்தால்தான் ரசிக்க முடியும்... 'நாலு மூலை' தொகுப்பாக 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டு இருக்கிறது என கேள்வி - வாங்க வேண்டும்... படிக்க வேண்டிய தொகுப்பு...

No comments: