அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, March 16, 2009

புத்தக கண்காட்சி 2009

எந்த வருடத்தையும் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சி சந்தோஷமாக அமைந்திருந்தது. மனைவி மற்றும் இரு தோழிகளுடன் வழி நெடுக்க பேசி கொண்டே நடந்தோம். கொஞ்சம் கால் வலி இருந்தும், இத்தனை புத்தகங்களை ஒரு சேர பார்க்கும் சந்தோஷம் அதையெல்லாம் மறக்கடித்து விடும். கவிதாவும் சில புத்தகங்களை இந்த முறை வாங்கியது கூடுதல் சந்தோஷம். அனு வழக்கம் போல கை நிறைய அள்ளி கொண்டிருந்தாள். நானும் கொஞ்சம் வாங்கியிருகிறேன். ரேவதியும் அவள் பங்குக்கு கொஞ்சம் வாங்கியிருந்தாள். மொத்தத்தில் புத்தகவாசம் இன்னும் சில மாதங்கள் இருக்கும் அளவுக்கு புதிய புத்தக பூக்கள் வீடு முழுவதும். மூத்த பத்திரிக்கையாளர் ஞானி, மற்றும் மனுஷ்யபுத்திரன், சாரு ஆகியோரை சந்திக்க நேர்ந்தது. மனுஷ் என்னைவிட அனுவுக்கு நல்ல தோழர். உயிர்மெயில் சாருவும், சுஜாதாவுமே நிறைய இருந்ததால் அதிகம் வாங்கவில்லை. கி.ரா வின் புத்தகங்கள் மூன்றும் (கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள், நண்பர்களுடன் நான்), திலகவதியின் கல்மரம், இந்திராகாந்தி வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு என என் புத்தக தேர்வு இந்த வருடம் கொஞ்சமாகவே இருந்தது. மற்றும் சில சுவரஸ்யமான சிறு புத்தகங்களும் உண்டு (காமத்து பாலில் உளவியல், ஆதிசங்கரரின் காம சாஸ்திரம்). கொஞ்சம் சமையல் புத்தகங்களும் இருந்தது (குடும்பஸ்தனய்யா.!). கடவுள் பற்றிய ஒரு உளவியல் ஆய்வு - ரேவதியின் புத்தகம். சுவரஸ்யமான தொகுப்பு. அனுவின் புத்தகங்களை அவர்களுடைய வலைபூவில் பார்க்கலாம். நெடுநாள் நண்பர் ஒருவரை சந்தித்தோம். திருமண பரிசு மற்றும் எங்கள் ஜமாவில் கலந்து கொண்டு எங்கள் நாட்களை மேலும் கலகலப்பாக்கினார். முள்ளும் மலரும் திரைப்படம் சனிக்கிழமை நள்ளிரவு வரை பார்த்தோம். ஞாயிற்று கிழமை கறி குழம்பு மறுபடி புத்தக கண்காட்சி உலாவுமாய் கழிந்தது - மூன்று பெண்களின் லூட்டி வாரத்து களைப்பை எல்லாம் ஓரம்கட்டி விட்டது. எல்லாரும் கிளம்பி போன ஞாயிற்றி கிழமை இரவு - வெறிச்சென்று இருந்தது. நானும் ரேவதியும் மட்டும் கொஞ்சம் டிவி பார்த்துவிட்டு தூங்கிவிட்டோம். மறுபடி ஒரு புத்தக கண்காட்சி வந்தாலும் இது போல இருக்காது என்று மட்டும் நிச்சயம்.

No comments: