அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, March 31, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு...

தோல்வி பற்றி மட்டும் அல்ல.. தோல்வி நேரும் என்ற நினைப்பு கூட சிலருக்கு பயமாகவும் கசப்பாகவும் உள்ளது. பள்ளி கூடங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதிப்பதில் இருக்கும் அரசியல் இதனை உறுதிப்படுத்துகிறது. பொது தேர்வில் பங்கெடுத்தால் நிச்சயம் தேற மாட்டார்கள் என்றிருக்கும் மாணவர்களை தனிப்படுத்தி அவர்களுக்கு தேர்வெழுதகூட அனுமதி அளிப்பதில்லை சில பள்ளிகூடங்கள். அடிப்படை வாய்ப்பு கூட மறுக்கபடுகிறது. இவர்களை எல்லாம் தனிமைபடுத்தி - பின்னர் இரண்டு மாதங்களில் வரும் மறு தேர்வில் தனியார் மாணவர்களாக நிறுத்தி விடுகிறார்கள். பள்ளிகள் 100% தேர்வு வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த வியாபாரத்தை - நீதிமன்றம் தலையிட்டு தேர்வுக்கான அனுமதியை அளிக்க கட்டளையிட்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், அரசியல் எல்லாம் வியாபாரமாகிவரும் வரும்காலம் - அடிப்படை உரிமைகள் மறுக்கபடும் சமுதாயத்தையும், தோல்வி பயம் காணும் மன பலமில்லாதவர்களையும் மட்டுமே உருவாக்க போகிறது.

No comments: