அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, March 25, 2009

நாவினால் சுடும்...

சென்ற வார இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று நினைக்கிறேன் - பட்டிணத்து குடும்பங்களின் சமீபகால கவலையாக ஒரு பிரச்சனையை பற்றி எழுதியிருந்தது. அது குழந்தைகள் "கெட்ட வார்த்தை" பேசுவது.. கெட்டவார்த்தை என்று ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தால் மனிதர்கள் வன்முறையில் உலகத்தை அழித்திருப்பார்கள் என்று எங்கொ படித்ததுண்டு.. அது உணர்வு ரீதியான கோபத்தை காண்பிக்கும் முறை. ஆனால் இன்றைய குழந்தைகள் பல வார்த்தைகளை அர்த்தம் புரியாமல் பேசுவதை கவனிக்கின்றோம். சிலருக்கு தெளிவான அர்த்தம் புரிகிறது என்றாலும் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி அலைக்காக வேண்டும் என்றே பேசுகிறார்கள். பல கெட்ட வார்த்தைகள் டிரைவர், வாட்ச்மேன், பக்கத்து வீட்டு ஆட்கள், தெருவில் போகும் மனிதர்கள், சக குழந்தைகள் - மற்றும் (சில நேரங்களில்) பெற்றோரிடமிருந்தும் கற்று கொள்கிறார்கள். இன்றெல்லாம் ஆங்கில கெட்ட வார்த்தைகள் சகஜமாகிவிட்டன (உபயம்: பெற்றோர், டிவி, டிவிடி திரைப்படங்கள்)..தமிழ் கெட்ட வார்த்தைகள் உபயம் தமிழ் சினிமா, வடிவேலு, விவேக் மற்றும் சில சின்னதிரை நிகழ்ச்சிகள். வன்முறை உணர்வை அடக்கி, அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் கெட்டவார்த்தைகள் இன்று சில நேரம் பேஷன் வார்த்தைகளாக உபயோகபடுத்தபடுகின்றன... மொழிவாரியாக கெட்ட வார்த்தைகளை ஒரு சிறுபத்திரிக்கை - பெயர் சரியாக நினைவில்லை - தேடி அதன் பின்புலத்தை ஆராய்ந்து இருந்தது.. பெரும்பாலானவை உறவு சார்ந்த கொச்சை அர்த்தங்களை கொண்டவை.. சாதாரண மட்டத்தில் இருக்கும் மனிதர்களை விட, படித்த நல்ல நிலையில் இருக்கும் மனிதர்கள் பேசும் வார்த்தைகள் கேட்க சகிக்காது - என்ன அது ஆங்கிலத்தில் இருக்கும். சொல்ல போனால் இது ஒருவகையான மன பிழற்சி - எனினும் ஒரு வடிகாலும் கூட. நான் சில முறை சென்னை குழாயடி சண்டைகளை கவனித்து இருக்கிறேன் - தினமும் நடந்தாலும் - ஒரு போர்னோ திரைப்படம் பார்க்கும் உணர்வை அந்த சண்டையில் சொல்லப்படும் வார்த்தைகள் தந்து விடும்...ஆனால் அதுக்கப்புறம் எல்லாம் மறந்து ஈஷிக்கொள்வார்கள்.. முன்பெல்லாம் ஒரு சின்ன திட்டு திட்டினாலே இரண்டு நாள் பேசாமல் இருக்கும் காலம் - இப்போதெல்லாம் என்ன வார்த்தை சொல்லி திட்டினாலும் - கண்டு கொள்ளாமல் போய் கொண்டு இருக்கிறார்கள் - அவ்வளவு சகிப்பு தன்மை என்று கொள்ள கூடாது - அவ்வளவு சகஜமாகிவிட்டது. சில பெற்றோர் சொல்வது என்னவென்றால் - ஆங்கிலத்தில் என்ன சொன்னாலும் பரவாயில்லை - தமிழில் கெட்டவார்த்தை பேசாமலிருந்தால் சரி... !!! என்ன கொடுமை சார் இது..!!!

No comments: