அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, March 18, 2009

குற்றமும் எழுத்தும்...

காலை 'கலைஞர்' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர்கள் சுபா பேசி கொண்டிருந்தார்கள். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ராஜேஷ்குமார் நாவல் புத்தகங்கள் அறிமுகமானது. பாக்கெட் சைஸ் நாவல்கள் 8ஆம் வகுப்பு காலத்தில் என நினைவு. காமிக்ஸ் புத்தகங்களுக்கு இணையாக நாவல்களும் படித்து கொண்டிருப்பதுண்டு. பெறும்பாலும் கிரைம் நாவல்கள்தான். விவேக்கின் புத்திசாலித்தனத்தின் மேல் அதீத பிரேமை கொண்ட காலங்கள்.. கோகுல்நாத் விவேக் பங்கு பெறும் நாவல்கள் நிறைய வைத்திருந்தேன். கதை சொல்லும் அமைப்பே அந்த வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். சுருக்கமான வசனங்கள், சம்பவ கோர்வைகள் மற்றும் காட்சி அமைப்புகள் - ராஜேஷ்குமார் கலக்கி கொண்டிருந்தார். அப்புறம் சுபா. நரேனும் வைஜயந்தியும் ராம்தாஸும் அனிதாவும் ஜான் சுந்தரும் - ஈகில்ஸ் ஐ என்ற துப்பறியும் நிறுவனம் - கொஞ்சம் இளமை புதுமை கொண்டது. ஒரு இன்ஸ்பெக்டரும் அவர் மனைவியும் கூட கூட்டணி கதாபாத்திரங்கள் என நினைவு. சுபாவின் மற்றொரு சுவரஸ்யமான கதாநாயகன் செல்வா - என்ற செல்வராஜ் - அவரின் அஸிட்டென்ட் முருகேசன். மெல்லிசான நகைச்சுவையும் - எப்போது பிரச்சனையில் நேரடியாக சிக்கி கொள்ளும் பாங்கும் கொண்ட இந்த கதாபாத்திரத்தின் கதைகள் என்னிடம் இன்னும் கொஞ்சம் இருக்கின்றன. பரத் - சுசீலா, பட்டுகோட்டை பிரபாகரின் கதாநாயகர்கள். புத்திசாலிதனமும் காதலும் கொஞ்சும் ஜோடி. ஒரு முறை சுபாவும், பி.கே.பியும் சேர்ந்து ஒரு நாவல் எழுதினார்கள் - 4 கதாநாயகர்களும் கலக்கிய நாவல் அது. பல புத்தகங்களை சென்னை பாரிஸ்கார்னரிலும், கோவை பழைய புத்தக மார்கட்டிலுமே சேகரித்திருந்தாலும் இன்னும் வைத்திருக்கிறேன். இவர்கள் தவிர வேறு எந்த துப்பறியும் நாவலும் அதிகம் படித்ததில்லை. சுஜாதாவின் கணேஷ்-வசந்த் - இவர்களை துப்பறிவாளர்கள் என்று தனிமைபடுத்த முடியாத அளவு பன்முக அமைப்பு கொண்ட கதையம்சங்கள் இருக்கும். சகஜமான - புத்திசாலிதனம் மிக்க - லேட்டரல் திங்கிங் கொண்ட கணேஷ் - சபலங்களில் இருக்கும் - அதீத குறிப்பு நினைவாற்றலும் இளமையும் கொண்ட வசந்தும் சுஜாதாவின் அடிப்படை இரண்டு முகங்களே. சட்ட குறிப்புகள், வரலாறு, சிந்தனைவாதம், கிரைம், மெல்லிய நகைச்சுவை, வெளிப்படுதலில் முகசுளிப்புகாட்டாத செக்ஸ் என இவர்களின் தளம் முற்றிலும் வேறு. கடைசியாக படித்தது ஜெயமோகன் எழுதிய 'நான்காவது கொலை' திண்ணை இணைய தளத்தில் படித்தது. பின்நவீனதுவம் வடிவு கொண்ட பெரும் சிறுகதை வகை இது. 10 பாகங்கள் என நினைவு. கிட்டதட்ட எல்லா துப்பறிவாளர்களும் இருப்பார்கள் - ஷெர்லக் கொம்ஸ், ஜேம்ஸ்பாண்ட், கணேஷ் வசந்த், திகம்பர சாமியார், சங்கர்லால், துப்பறியும் சாம்பு என.... - படிப்பது ஒரு ஜாலியான அனுபவம். இது இலக்கியமா - சமூக சமுதாய விழிப்புணர்வு அல்லது ஏதேனும் நன்மையுண்டா என்ற கேள்விகளைதாண்டி ஏதேனும் ஒரு வகையில் புத்தகங்களை படிக்க வைக்கிறது.

No comments: