அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, April 17, 2006

காதலும் குழப்பங்களும்...

கடந்த 4 மாதத்தில் சட்டென நிறைய காதல் கதைகளை கேள்விபட்டு கொண்டு இருக்கிறேன்... நேற்றுவரை நன்றாக இருந்துவிட்டு சட்டென இன்று காதல் வந்துவிட்டது என்று சொல்லி நிலாவை பார்த்து தென்னை மரத்தை பார்த்து கவிதை எழுத தொடங்கிவிடுகிறார்கள்...ரொம்ப பெரிய மனிதர்கள் போல வாழ்க்கையை பற்றிய கணக்கு...எதிர்காலம் பற்றிய கணிப்பு...தாங்க முடியவில்லை...முதல் வசந்தம் திரைப்படத்தில் சத்தியராஜ் சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.. "மொதல்ல வேட்டிய ஒழுங்கா கட்டுங்கடா டேய்...அப்புறம் பண்ணலாம்..காதலும் கத்திரிக்காயும்... " பசங்களுக்கு காதல் மிக சுலபமாக வந்து விடுகிறது..பெண் கொஞ்சம் பார்க்கும்படி அழகாக இருந்தாலே போதும்...பசங்கள் பாயை பிறண்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.. கூட இருப்பவர்கள் நிலைதான் பரிதாபமாகிறது... பெண் பிள்ளைகள் நிலை இன்னும் பிரச்சனை..யாராவது கொஞ்சம் ஆறுதலாக பேசி பழகி, கொஞ்சம் உதவிகள் செய்து, லேசான கதாநாயகதனத்துடன் (ஓரளவுக்கு பார்க்க லட்சணமாக இருந்து...பைக் ஓட்டுதல், ஜெல்போட்டு தலை வாருதல், கொஞ்சம் விலை உயர்ந்த கலர்கலரான சட்டைகள், காபிடேயில் டின்னர்...மற்றும் பல).. இருந்து, பிடித்த விஷயங்களை பேசி..பழகினால்..அப்புறம் அவர்களுக்குள்ளும் காதல் விதைபோட்டு மரமாகிவிடுகிறது..தவிர்க்கமுடிவதில்லை...எல்லா பசங்கள், பெண் பிள்ளைகள் அப்படி இல்லை என்றாலும்... 70% இந்த குழப்பத்தில்தான் இருக்கிறது..இதில் இன்னொரு குழப்ப சமுதாயமும் இருக்கிறது...எல்லா பெண்களுக்கும் அஜீத், விஜய் போல பசங்கள் தேவைப்படுகிறார்கள் (கிடைக்காவிட்டால் கிடைத்தவரை சரி..) எல்லா ஆண்களுக்கும் திரிஷாவும் அஸினும் தேவைப்படுகிறார்கள் (கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிடைத்த பெண்களுடன் பழகுவது ஒரு உதாரணம்...) இதில் உதார் வேறு.. நாங்கள் எல்லாம்.. உதாரண காதலர்கள் என்று.. அதாவது தெய்வீக காதலாம்... உடல் ஈர்ப்பு கிடையாதாம்.. அப்புறம் எதுக்கு நண்பர்களே அழகான (அல்லது அழகு என்று நினைத்து கொண்டு இருக்கும்..) பெண்களும் ஆண்களும் தேடி நட்பு கொண்டு காதல் என்ற நிலைக்கு முன்னேறுகிறீர்கள்.. லட்சணமில்லாத துணையை தேட வேண்டியதுதானே... தொடாமல் பழக வேண்டியதுதானே...கல்யாணம் செய்து கொண்டு பிரம்மசரியத்தை பூண வேண்டியதுதானே.. அது எல்லாம் கூடாது.. எல்லாம் வாய்பந்தல்.. செக்ஸ் இல்லாத காதல் என்று ஒன்றும் இல்லை.. எல்லாம் ஆர்மோன் கோளாறு என்றால்.. உன் பார்வை சரியில்ல்லை என்று நமக்கு அறிவுரை... அன்பு நண்பர்களே.. உங்கள் எல்லாருக்கும் என் பதில்கள் இது..

என்னை பொருத்தவரை..காதல் உடல்சாராமல் வராது.. அப்படி வரும்காதல் நிலைத்து நிற்க்கும்.. அப்படி நிற்க வயது 40க்கு மேல் காதல் வரவேண்டும்.. காதல் வெறும் ஆர்மோன் கோளாறு... உடம்பில வளைவுகளும், பர்ஸில் கனமும் இல்லாத ஆணும் பெண்ணும் காதல் செய்தால் எனக்கு கடிதம் எழுதுங்கள்.. நீ கவிதை எழுதுகிறாயே அந்த தேவதை யார் என்று கேட்க்கும் புத்திசாலிகளுக்கு.. அது தேவதைதான்.. ஆனால் நான் தெய்வீக காதலன் இல்லை... உடல் இச்சைகளுக்கு அப்பாற்படாத காதல் என்று பொய் சொல்லி திரிவதில்லை.. இது என் வாக்குமூலமாகவும் வைத்து கொள்ளலாம்.... குழப்பி கொண்டு என்னையும் குழப்பி விட்டு திரியாதீர்கள்.. (நான் குழப்பினால் நீ ஏன் குழம்புகிறாய் என்று கேள்வி வேறு...) ஆதலினால் நண்பர்களே காதல் செய்யுங்கள்.. ஆனால் தெய்வீக காதல் என்று சொல்லி திரியாதீர்கள்.. அப்படி யாராவது உண்மையாகவே தெய்வீக காதலர்கள் இருந்தால்.. கோடி நமஸ்காரம்... என்னை சந்திப்பதை தவிர்த்து விடுங்கள்...வீண் வாக்குவாதங்களால் தீமை என்று ராசிபலன் எழுதியிருக்கிறது..

3 comments:

Anonymous said...

Well said, very well said.

I agree with your point. But Love is always needed to write kaviathai ;)

துரத்து சிறுவர்களுக்கு
கைக்காட்டும்
இரயில் பயணிகளின் சிநேகத்தைப் போல்
இந்த உறவும்
அர்த்தமில்லாதது

-This is what is wrote in my diary when i started to write kavithai about love :)

-Shalini

சுபா காரைக்குடி said...

தெளிவாக சொல்லிவிட்டீர்கள் !!

காதல் செய்யுங்கள்.. ஆனால் தெய்வீக காதல் என்று சொல்லி திரியாதீர்கள்..
காமம் இல்லாத காதல்,மனதும் மனதும் மட்டும் தான் சம்பந்தபட்டது... இப்படி நிறைய மக்கள் தங்களை ஏமாத்திக்கிறாங்க!!

ஆர்மோன் கோளாறு தான் என்று ஒத்து கொள்ள பயம் !! ஒத்துகிட்டா தப்பா நினைச்சிடுவங்களோன்னு பயம் !!

DAWOOD said...

NAAN IPPATHAN ITHA PATICHEN ENGA SOLLUVATHU 100% SARI SARI SARI...................