அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 16, 2006

கவிதையும் குழப்பமும்...

சென்றவாரம் எழுதிய கவிதை என் நண்பர்கள் வட்டத்தை கொஞ்சம் குழப்பிவிட்டதுபோலும். பொதுவில் என் கவிதைகளை நான் யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. வெகுசிலரே அதனை சரியான முறையில் புரிந்து கொண்டார்கள். அதைவிட ஆச்சரியம் அவர்களில் சிலர் முற்றிலும் புதிய நண்பர்கள். உரைநடை வட்டம் கவிதையை கொஞ்சம் குழப்பிகொண்டதில் ஆச்சரியம் இல்லை - சிலர் மொழிபெயர்ப்பு கவிதை என்று வேறு சொன்னது எனக்கு கொஞ்சத்தில் அதிர்ச்சி. சிலர் கவிதையில் இருந்த காமத்தை மட்டும் படித்துவிட்டு அற்புதமான விமர்ச்சனம் செய்தார்கள். சிலருக்கு அதின் வார்த்தைகள் மட்டுமே குழப்பியிருந்தன. எது எப்படி இருப்பினும் சிலர் கூப்பிட்டு காட்டமான விமர்ச்சனங்கள் செய்த்தார்கள் - பொதுவான குற்றச்சாட்டு பெண்களை காமத்துபாலின் உருவகங்கள் ஆக்கியிருப்பது. இதனை சொன்னவர்கள் எல்லாரும் ஆண்கள் -நன்றி நண்பர்களே. பெண் தோழிகள் இதனை எடுத்து கொண்ட விதம் பற்றி எனக்கு பூரண திருப்தி. மெல்லிய புன்னகை. அர்த்தமுள்ள பார்வைகள். செல்லமாக கொஞ்சம் விமர்ச்சனம். அப்புறம் இன்னும் எழுதுடா என்று அன்புகட்டளை.காமம் சொல்லவும் கொஞ்சம் தினவு வேண்டும் என்று புன்சிரிப்புடன் கூடிய பாராட்டு. கவிதையில் நான் சொல்லியிருந்த சில பெண்களும் கவிதையை படித்து இருந்தார்கள். நானும் ரொம்ப போய் விமர்ச்சனம் கேட்கவில்லை - வந்த வரையில் கவிதை சுமார் என்று புரிகிறது - எனினும் - " ரொம்ப உண்மையெல்லாம் எழுதாதே.." என்ற அன்பு எச்சரிக்கையும் வந்தது. சில புது நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். எனவே எது எப்படி இருந்தாலும் இனிமேல் கொஞ்சம் கவிதையும் எழுதவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டேன் - உங்கள் விமர்ச்சனமழையில் நனைய இதோ இன்னும் ஒரு புது கவிஞன்.

No comments: