அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 30, 2006

காத்திருத்தலில்...

சென்ற வாரம் ஒரு தோழி என்னை அழைத்திருந்தாள். அவளுக்கு அடுத்தநாள் காலை சண்டிகர் செல்லும் ரயில். இரவு முழுவதும் தன்னுடன் ரயில் நிலையத்தில் இருக்கமுடியுமா என கேட்டிருந்தாள்...தவிர்க்க முடியாத காரணங்களால் முந்தயநாள் இரவே நான் கோவை புறப்பட வேண்டி இருந்ததால் அவள் அழைப்பை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது. ரயிலில் நிராகரித்தலின் வலி எனக்கும் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் கோவை ரயில் நிலையத்தில் அப்படி ஓர் இரவு முழுக்க ஒரு புதிய தோழியுடன் கழித்தது நினைவு வந்தது...அலுவகத்தில் மேலதிகாரிக்கு உறவு அந்த பெண் - ஒரு புரோஜக்ட் விஷயமாக சில நாட்கள் - ஏறக்குறைய ஒரு மாதம் நாங்கள் பழகியிருந்தோம். நிறைய பேச்சு...கொஞ்ச நேரம் என் மடியில் தூக்கம்...யாரும் இல்லாத பிளாட்பாரங்களில் நடை, சின்ன குறும்புகள், ஒருவருக்கொருவர் இதுவரை இல்லாத அறிமுகங்கள்...கொஞ்சமே கொஞ்சம் ரகசிய பரிசுகளும் பரிமாற்றங்களும்... என அந்த இரவு வாழ்வில் சில இரவுகள் போல மறக்க முடியாதது. அந்த இரவு அதன் நிறத்தை எங்கள் நினைவுகளில் தீற்றிவிட்டு இருந்தது... நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்பது கூட வாதத்துக்கு அப்பாற்பட்டது...காலை 5 மணிக்கு ரயில்... அதற்கு பிறகு நாங்கள் சந்திக்கவில்லை ...முயற்சிகளும் எடுக்கவில்லை... நினைவுகள் மட்டுமே... சில நேரங்களில் அருகில் இருக்கும் தோழமையை விட... தொலைந்து போன தோழமைகள் மனதின் அருகில் இருக்கிறார்கள்.

வெண்ணிலாவின் ஒரு கவிதை...

எதைப் பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா..?
மழை பற்றி எழுதுவது சுகமா..?

No comments: