அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 30, 2006

நம்பிக்கைகள்...

பெரும்பாலும் நான் கோவில்களுக்கு போவதை விரும்புவதுண்டு. காரணங்கள் பக்தியை தவிர வேறு சிலவும் உண்டு. அங்கு உள்ள அமைதி,விலாசமான கலை, பார்க்க நேரிடும் மனிதர்கள், செய்யபடும் பிராத்தனைகள், விளையாடும் குழந்தைகள், அடிப்படையாக நம்பிக்கையும் கூட..பெரிய கோவில்களின் பால் உள்ள ஈர்ப்பு ஒரு வகை என்றால் சிறிய கிராமிய கோவில்கள் பால் கொண்ட ஈர்ப்பு மற்றோர் வகை. ஸ்ரீரங்கமும், சிதம்பரமும், திருஅண்ணாமலையும் ஒரு வகையான உணர்வுகளை கொண்டு வந்தது...அதே நேரம் கும்பகோணம் பயணத்தில் பார்த்த திருவழஞ்சுழி, திருபுவனம், திருவையாறு, மயிலாடுதுறை, பழையாறை, பட்டீஸ்வரம், தாராசுரம், திருவிடைமருதூர் மற்றும் சமீபத்தில் வியந்த உத்திரமேரூர் ஆகிய கோவில்கள்
மற்றோர் வகையான உணர்வுகளை கொண்டு வருகின்றன...பிந்தைய கோவில்கள் மிகவும் என்னை கவர்ந்தன காரணம் அங்கு காணப்படும் கூட்டமின்மையும் அமைதியும்தான்...எங்கள் கிராமத்தில் ஒரு கோவில் இருக்கிறது...பெரும்பாலும் கோவில் விழாக்களில்தான் மக்கள் கூட்டம் வரும்...மற்ற நாட்களில் விச்சிராந்தமான அமைதி... முதலில் ஒரு வேம்பு மரம்..கீழே மேடையில் பிள்ளையார்... காற்று அவ்வளவு அற்புதமாக வரும் அந்த மேடையில் அமர்ந்திருந்தால்.. உள்ளே சிறு மண்டபம்..கர்ப்பகிரகம்..அருகில் சுற்றி வரும்போது சில காவல்தெய்வங்கள்..சிறு கிணறு..அற்புதமான கற்கண்டு போன்ற தண்ணீர்...சுற்றிலும் நிறைய மரங்கள்...ஆங்காங்கே பொங்கல் வைக்கபட்ட கல் அடுப்புகள்... நல்ல காற்றும் அமைதியான சூழலுமே
கோவிலை அற்புதமாக்கி விடுகின்றன... தாராபுரம் அருகே இருக்கும் அமராவதி ஆற்று கரையில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலும் அப்படித்தான்... ஆற்றில் வழிந்தோடும் தண்ணீரும் அரச மரத்தடி பிள்ளையாரும்...மண்ணில் புதைந்து இருந்து இன்னும் பூஜை வாங்கிகொள்ளும் சிவலிங்கமும்.. அந்த ஏகாந்த சூழலை விவரிக்க வார்த்தைகள் போதுமானதில்லை... பெரிய சுலோகங்கள்...பெரிய மந்திரங்கள் கிடையாது...சமஸ்கிரதம் கிடையாது..தமிழில் கிராமிய வார்த்தைகளில் அர்சனைகள்... சாதாரண வஸ்திரங்களும், சூடங்களும், விளக்கும் இன்னும் மனிதர்கள் வாசிக்கும் கிராமிய இசையும் கொண்ட...கிராம மக்களின் நம்பிக்கையை மட்டுமே சுமந்த தெய்வங்கள்... மழையும் வெயிலும் பூமியும் காற்றும் ஆகாயமுமே கடவுளாக
கொண்ட...அவற்றுக்கு உருவம் தந்த மக்களின் நம்பிக்கையை பொய்க்காத தெய்வங்கள்.. அருள் வருவது, கிடா வெட்டுவது என்று சில விஷயங்கள் இருந்தாலும் அவை அனைத்திலும் நம்பிக்கை பார்க்கும் ஜனங்கள்... கோவில்களில் பிராத்தனைகள் என்பது அவரவர் எண்ணமும் விருப்பமும்... என் முதன்மை...கோவில்களில்... அமைதியான ரசித்தலும்.. மனசு நிறைய சுலோகங்களும்...அமைதியான ஏகாந்த சூழலில் மென்மையாக கடவுளுடன் பேசும் தியானமும்தான்... பொதுவில் நம்பிக்கைதான் கடவுள்...அதனை மேம்படுத்தும் இடமே கோவில்...

மாசிலா விநாயகமூர்த்தியின் ஒரு கவிதை...

நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொள்கிறது மனசு.
எதை வேண்டி
எதைப் பெறுவது...?

No comments: