அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 16, 2006

இரவுகளில்...

ராமகிருஷ்ணனின் வார இதழ் தொடர் ஒன்றில் இரவுகளில் நகரங்களில் வாழ்க்கை பற்றி சமீபத்தில் படித்ததேன். இரவுகளில் நகரங்கள் புதிய அவதாரங்களை எடுக்கின்றன.. சில இரவு பயணங்களில் தாண்டி செல்லும் ஊர்களின் அடங்கும் வாழ்க்கை பற்றியும், பின்னர் மெல்ல விழிக்கும் வாழ்க்கை பற்றியும் நினைத்ததுண்டு.. ராமகிஷ்ணன் அற்புதமான பயணி. தன் பயணத்தில் அனுபவங்களை அவர் சொல்லும் பாங்கு அற்புதமாக உள்ளது. தொகுப்பு வெளியிடப்படும்போது மறக்காமல் வாங்க வேண்டும். சங்க சித்திரங்களில் ஜெயமோகன் இயல்பான வாழ்க்கையின் இலக்கியம் பற்றி பேசும் போது இருந்த லயம், ராமகிருஷ்ணனின் எழுத்திலும் இருக்கிறது. இரவு ஊர்கள் பற்றியும், அதிகாலை ஊர்கள் பற்றியும் எழுத நிறைய உள்ளது. சில ஊர்கள் ஓவியங்களை போல மனதில் பதிந்து இருக்கின்றன. ஊர்களின் பெயர்கள் விசித்திரமான காரணங்களை சொல்லி மனதில் பதிந்து உள்ளன. சில ஆறுகள், பெரும்பாலும் கோவில்கள், சில ஊர்களில் மனிதர்கள், சில ஊர்களில் உணவு என ஒவ்வொரு ஊரும் ஏதோ ஒரு அடையாளத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் கிராமம் கிராமமாக சென்று பார்க்கும் ஆர்வம் இன்னும் இருக்கிறது. நேரம் கிடைப்பதில்லை - வருடத்தில் ஒருமுறையாவது அப்படி பயணம் செய்யவேண்டும். ஒருமுறை கும்பகோணமும் அதனை சுற்றியுள்ள இடங்களும் சென்றிருந்தேன். அற்புதமான அனுபவம். பயணம் தனிமையின் அரூபமாக தன்னையும் இணைத்து கொள்கிறது. கொஞ்சம் காகிதங்கள். கொஞ்சம் பென்சில்கள்,கொஞ்சம் பணம் அவ்வளவுதான். வரைவதை அங்கேயே யாரிடமாவது கொடுத்து விட்டு வந்து விடுவதுண்டு. பெரும்பாலும் சிறுவர்கள் சிறுமியர். சில நேரம் வயசாளிகள். முகமறியாத மனிதர்களுக்கும், தண்ணீர் கேட்டால் மோர் கொடுக்கும் குணம் இன்னும் அங்கே இருக்கிறது.

No comments: