அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 30, 2006

காலம் தாண்டும் கவிதைகள்...

சில கவிதை தொகுப்புகள் கிடைத்து இருக்கிறது...அவை சில வருடங்களுக்கு முந்தயது.. கவிதைகளுக்கு காலவெளி கிடையாது... சில கவிதைகள் என் சில அனுபவங்களை ஒத்து போவதால்..அவற்றையும் அவற்றை சார்ந்த என் நினைவுகளையும் இங்கு பதிவு செய்கிறேன்...

வெங்கடேஷ் வரதராஜனின் ஒரு கவிதை...

காத்திருத்தல்

நீ வரும் பாதையில்
காத்திருந்த காலங்கள்
நீ கடந்து சென்ற பின்னர்
நகரவிடாத பொழுதுகளாய்
மாறி இம்சைதரும் கணங்கள்.

இப்போதெல்லாம் அப்பாதையில்
நீ வருவதில்லை.
நானும் காத்திருப்பதில்லை..

எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை.
யாரோ யாருக்காகவோ
காத்திருக்கத்தான் செய்கிறார்கள்
பாதை நெடுகிலும்.

இப்படியாய் கழியும் பொழுதுகள்
-- தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி

நேருக்கு நேராய்
நினைப் பார்க்க விழைகிறேன்
பின் ஏனோ
விழிகளைத் தழைக்கிறேன்

உன்னிடம் ஏதோ
சொல்ல நினைக்கிறேன்
ஆனால் இதழ் புதைத்து
மெளனம் காக்கிறேன்

வளைக்கரத்தை மெல்ல
வருட நினைக்கிறேன்
இருந்தும் இன்னும்
வாளாதிருக்கிறேன்

என் விந்தையான போக்குக்கு
பிறர் காரணம் அறியார்

அறிந்த நீயோ
இங்கே இல்லை

No comments: