அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 16, 2006

கண்ணதாசனும் மதுவும்...

மது அருந்தும் கலாச்சாரம் பற்றிய சிறு விவாதத்தில் ஒரு நண்பர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" புத்தகத்தில் எழுதியுள்ளதை படிக்கசொன்னார். முதலிலேயே படித்து இருந்தாலும் மறுபடி தேடி படித்தேன்... படித்ததில் இருந்து சில வார்த்தைகள்...

"எனக்கு இருபது ஆண்டுகளாக மதுப்பழக்கம் உண்டு - நான் தார்மீக ஒழுக்க கேட்டுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது என கருதுகிறேன்.. சட்டம் போட்டு ஒன்றை மறைக்க மறைக்க அது பற்றிய ஆசைகள் கிளர்ந்து கொண்டு இருக்கும். ஆகவே தான் மதுப்பழக்கம், பெண் உறவு ஆகிய இரண்டையும் சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியாது என வாதிடுகிறேன். அடுத்தவனுக்கு தீமை பயக்ககூடிய சமுதாய ஒழுக்க கேட்டைமட்டுமே சட்டம் தடுக்க முடியும். தனிமனித ஒழுக்கத்துக்கு அது உத்திரவாதம் தேட முடியாது..."

சத்தியமான வார்த்தைகள்.. அனுபவஸ்தர் பேசுகிறார்... கண்ணதாசனின் பாடல்களை போலவே சில எழுத்துகளும் அற்புதமானவை...

No comments: