அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 16, 2006

மரணங்களை சொல்கிறதாக...

பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போக துடைக்கிறது
எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையை துடைக்கிறது
பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது
டி.வி, டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது
எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது
இப்படிவீடு முழுக்க வேலைகளை
செய்து கொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை.

இந்த கவிதை மிக சுலபமாக நாம் மறந்துபோகும் சில மரணங்களை சொல்கிறதாக நான் கருதுகிறேன். மரணம் மற்றவருக்கு நடக்கும்போது மிக எளிதாக எடுத்துகொள்ளப்பட்டு மிக விரைவில் மறக்கப்படுகிறது.எனினும் யாரும் மரணத்தை தொட்டு பார்க்க துணிவதில்லை. மரணத்துக்கு பின்னால் இன்றெல்லாம் மிக விரைவாகவே சகஜவாழ்விற்க்கு யாரும் வந்துவிடுகிறார்கள். சின்ன வயதில் சில மரணங்களை பார்த்திருக்கிறேன். அவை மறக்க நெடுநாட்கள் ஆகின. சமீபகால மரணங்கள் சில நாட்களிலேயே மறந்துவிடுகின்றன.காலமும், நம் வாழ்க்கைமுறையும் கொஞ்சம் காரணங்கள் ஆகினாலும், நாம் எல்லாரும் முன்புபோலவே பிணைப்பான பந்தங்களில் இருக்கிறோமா என்ற கேள்வியும் எழுகிறது.

No comments: