அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 16, 2006

தனிமை - ஒரு சமூக பார்வை...

ஒருமுறை பேரூரில் சுற்றி கொண்டு இருக்கும் போது ஒரு பெண் போலீஸை பார்த்தேன். முகத்தில் போலீஸ் தொழிலுக்கான கடுமை இல்லை. ரொம்பவும் சாத்வீகமாக மக்களை வரிசைபடுத்தி கொண்டு இருந்தார். பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள ஒரு தேனீர் விடுதியில் உட்கார்ந்து இருந்தபோது என் எதிரே வந்து அமர்ந்தார்...சில நிமிட தயக்கத்துக்கு பிறகு என்னை அறிமுகபடுத்திகொண்டேன். பொதுவாக போலீஸ் நபர்களிடம் யாரும் அறிமுகபடுத்திகொள்வதில்லை.. யாரும் தள்ளி போய் விடுவார்கள்.காரணமும் தெரியவில்லை.. என் அறிமுகம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனினும் மிக சகஜமாக பேசினார்...பிறகு ஒருமுறை பூண்டி கோவில் விழாவில் பார்த்தேன்...புடவை கட்டி பாந்தமாக கோவில் வந்து இருந்தார்...மெல்ல மெல்ல நட்பு பூக்க ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்து கொண்டோம். திருமணம் செய்யாமல் 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்..அதிர்ஷ்டவசமாக புத்தகங்கள் கவிதைகள் ரசிக்கும் பழக்கம் இருந்தது....தற்போது அதிகம் தொடர்பு இல்லை. சில நேரம் தொலைபேசியில் பேசுவதுண்டு... போலிஸ் துறையில் நடக்கும் கூத்துகள் பற்றி பேசுவோம்.. அரசியல் எப்படி போலிஸ் துறையில் விளையாடுகிறது என்றும் யார் யார் எப்படி பலியாகிறார்கள் என்றும் அவர் சொன்னது எல்லாம் நேரடியாக பதிக்க முடியாதவை. இந்த பதிவு அதனை பற்றி அல்ல. சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் பேசும் போது சட்டென அழுது விட்டார்.. காரணம்..இன்றைய சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது.. திருமணம் ஆகாத கொஞ்சம் பார்க்க லட்சணமாக இருக்கும் சகஜமாக பேசக்கூடிய எந்த பெண்ணுக்கும் சமுதாயம் வைக்கும் பெயர் அவருக்கும் வைக்கபட்டு இருந்தது. இது பற்றிய சுய அறிவு இருந்தாலும் பெண்ணின் மனமாக சட்டென உணர்ச்சிவசபட்டு விட்டார்.. தனிமையாக வாழும் பெண்களின் ஒழுக்கத்தை சந்தேகப்படும் சமுதாயம் பற்றி நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தோம்.. இது மாற்ற முடியாதது என்பது தெரிந்த விஷயம்... தங்களின் கற்பனையில் உள்ள எல்லா விகாரங்களையும் சமூகம் சுற்றியுள்ள நபர்களின் மேல் பூசி தன்னை சந்தோஷத்தில் வைத்து கொள்கிறது.. என்றும் போலவே..

No comments: