அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, April 18, 2006

ஒரு சந்தேகமும் நிறைய குழப்பமும்...

தமிழ் கலாச்சாரம் என்று ஒரு குழப்பம் இருக்கிறது.. இது பற்றி வாய் கிழிய பேசும் சிலரை கவனித்து இருக்கிறேன். தமிழ் கலாச்சாரம் திருக்குறளை அடிப்படையாக கொண்டது என்று ஒருவர் என்னிடம் சொல்லி ஒத்து கொண்டால்தான் ஆயிற்று என்று பிடித்து நிறுத்தி துளைக்க ஆரம்பித்து விட்டார். வாய்மை, நேர்மை, புறம் கூறாமை, பிறன் மனை நோக்காமை, அன்பு, அறம், தூய்மை, கொள்கையோடு கூடிய வாழ்க்கை, நல்லதே பேசுதல், கற்பு என்று கருத்துகளை அடுக்க ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் கடைபிடிப்பவர் மட்டும்தான் இதனை பற்றி பேசவேண்டுமா இல்லை யாரும் பேசலாமா என்று தூண்டில் போட்டேன்...தமிழர் எல்லாரும் பேசலாம் என்று வாய்விட்டார். எனக்கு ஒரு கேள்வி...இன்றைய அரசியல்வாதிகளும் சமூக பாதுகாவலர்களும் மேலே சொன்ன கருத்து புதையல்களில் எதனையும் கடைபிடிப்பதாக தெரியவில்லை...வாய் கிழிய பேசுவதை தவிர... 6 மாசத்துக்கு ஒருமுறை கற்பு பற்றி பேசுவது ஒரு எடுத்துக்காட்டு... (அதுவும் பெண் கற்பு மட்டும்தான்...கற்பு என்பது உடலா மனமா என்று கூட யாருக்கும் தெரியாது.. )... ஆனால் எல்லாரும் - தமிழர்கள் என்று சொல்லி கலாச்சாரத்தை வேட்டியை விட இறுக்கமாக கட்டி பாதுகாத்து கொள்கிறார்கள்.. உங்களில் யாராவது விஷயம் புரிந்தால்.. சொல்லி கொடுங்கள்....தமிழ் கலாச்சாரம் என்றால் என்ன என்று...!!!

2 comments:

Anonymous said...

Hi
Your writing style is extremely good! When are you going to start
writing in Tamizmanam! I will be
patiently reading all of your
essays in the coming days.
Best wishes and good luck!

SARANRAJ S said...

Hi i like ur writing style,
and u had it in tamil,
if it in english how do i know ur feel,expression,.