அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, March 03, 2008

முயற்சி திருவினையாக்கும்

அம்மாவுக்கு வயது 56 ஆகிறது. என் இளம்பிராயத்தில் இருந்தே நிறைய சுலோகங்களை சொல்லி கொடுத்தது அம்மாதான். சமஸ்கிரதமாகினும் தமிழானாலும் ஸ்லோகங்கள் சாதாரண வார்த்தைகளை கூட சுத்தமாக உச்சரிக்க உதவுகின்றன என்பது என் அனுபவபூர்வமான எண்ணம். நான்கு மாதங்களுக்கு முன்னால் சிறு உடல்நல விஷயம் காரணமாக அம்மாவுக்கு ஒரு விசித்திரமான விளைவு ஏற்பட்டுவிட்டது. அவர்களால் சிந்திக்க முடிகிறது - வார்த்தைகளை கோர்வையாக சிந்திக்கவும் அவற்றை உச்சரிக்கவும் மிகவும் பிரயத்தனபட வேண்டியதாயிற்று. ஒரு வார இறுதியில் நான் அவர்களுடன் மருத்துவமனையில் இருந்தேன். எனக்கு நினைவு தெரிந்த சில சுலபமான சுலோகங்களை கூட நான் சொல்ல சொல்ல அவர்களால் திருப்பி சொல்ல முடியவில்லை. மெல்ல மெல்ல ஒரு ஸ்லோகம் மட்டுமே சொன்னார்கள் - நான் இன்னும் சில ஸ்லோகங்களை தினமும் உச்சரிக்க சொன்னேன். மெல்ல மெல்ல நினைவுகளில் இருந்து வார்த்தைகளை தேடி, தொடர்புபடுத்தி, உச்சரிக்க ஆரம்பித்தார்கள் - அதில் ஒரு குழந்தையின் பிராயத்தனம் தெரிந்தது. என்னுடனான தொலைபேசி அழைப்புகளில் எல்லாம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இந்த முறை வீட்டுக்கு வந்தபோது அந்த முயற்சியின் விளைவுகள் கண்கூடாக தெரிகிறது - அவர்களால் தெளிவாக பேச முடிகிறது - சிந்திக்க முடிகிறது - கொஞ்சம் தடுமாற்றங்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி - சில வினாடிகள் சிந்தித்து வார்த்தைகளை கோர்வைபடுத்தி - தன்னால் முடிகிறது எனும் குழந்தையின் வெற்றி புன்னகையோடு அவர்கள் பேச பேச - நிஜமாகவே நான் உணர்ச்சிவசப்படுகிறேன். முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும் எனும் சொல்லாக்கம் நிஜமாவதை காண்கிறேன். மேலும் சில மாதங்களுக்கு முன்னால் காது தெளிவாக கேட்கும் கருவி பொருத்திய பிறகு - கிட்டதட்ட 40 வருடங்களாக மெல்ல மெல்ல இழந்த கேட்கும் சக்தி திரும்பி - சைக்கிள் மணி, குழந்தை, வானொலி, பறவைகள் மற்றும் இசை என எல்லாவற்றையும் கிரகித்து கொள்கிறார்கள். அம்மாவின் பழக்கம் தனக்கு தெரிந்தவற்றை புரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுதல் - பொதுவாக என்னுடன் நிறைய பேசுவார்கள் - இப்போது எல்லாம் இன்னும் நிறைய பேசுகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் படிக்கிறார்கள் - தொலைகாட்சி பார்க்கிறார்கள் - என்னுடன் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன. வெகுநாள் காணாத தோழமையிடம் வருடத்து கதைகளை பகிர்ந்து கொள்ளும் பள்ளி குழந்தை மனதை காண்கிறேன். இயற்கை எனும் கடவுளை நான் நம்புகிறேன் - காலம் காயங்களை தோற்றுவிக்கும் வேகத்தோடு அவற்றை மறையவைக்கும் மருத்துகளையும் சம்பவங்களாக கொடுத்துகொண்டுதான் இருக்கிறது.

2 comments:

hari said...

iam very happy to read things like this

Anonymous said...

iam very happy to read things like this