அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, March 05, 2008

கோடுகளின் ஆதி

ஆதிமூலம் அய்யாவின் ஓவியங்கள் எனக்கு அறிமுகமாகும் முன்னர் டிராஸ்கி மருதுவின் ஓவியங்கள் மட்டுமே கோட்டோவியங்கள் என அறிமுகம் ஆகியிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அய்யாவின் ஓவியங்களில் தீவிரமானேன். அது மருது அய்யாவின் மரியாதையை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. நவீன ஓவியங்களின் அறிமுகமாகவே இருவரது ஓவியங்களும் இருந்தது. இயல்பான விஷயங்களை அழுத்தமான கோடுகள் வேறு ஒரு புலனுடன் என்னுள் பதிக்க தொடங்கின. என் ஓவியங்கள் பெரும்பாலும் அப்ஸ்டிராக்ட் மற்றும் சர்ரியலிச சார்புடையவை - நான் திட்டம் போட்டு வரைவதில்லை - இஸங்கள் சூழ்நிலைக்கேற்ப்ப கடைபிடிக்கபடும். அய்யாவின் ஓவியங்களின் பாதிப்பு மெல்ல என்னுள் எழ ஆரம்பித்தது அவருடைய ஓவியங்களின் முகங்களை பார்த்துதான். திட பொருட்கள் பற்றிய ஓவியங்களும் ஒரு காரணமான போதிலும் - முகங்கள் காரணமானது அவை திறந்து விட்டு கொண்டிருந்த நினைவு ஜன்னல்கள்தான். எல்லா முகங்களும் எங்கோ எப்போதோ காலத்தின் அடுக்குகளில் பார்த்த முகங்களாகவே இருந்தது - இது ஒருவித அடையாள குழப்பமாகவும் இருக்கும் என நினைக்கிறேன் - எனினும் - பெயர் தெரியாத ஆனால் வாழ்வின் ஏதேனும் ஒரு புள்ளில் இவர்களை சந்தித்திருந்தோம் என்ற நினைவு மிகவும் ஆழமாகயிருக்கும். இதனை விந்தை எனவும் சொல்லலாம் - ஆனால் நான் அய்யாவின் ஓவியங்களில் உள்ள மனித முக உணர்வு வெளிப்பாடு எனவே கொள்கிறேன். ஆழமான கருப்பு வெள்ளை கோடுகள் மற்றும் அழுத்தமான கோடுகள் அவற்றை சார்ந்து மனம் போனபடி வரைந்ததோ என நினைக்கவைக்கும் சார்ப்பு கோடுகள் - வேறு ஒரு கோட்டோவிய காலத்தை எனக்குள் பதித்ததால் - கொஞ்சமாய் அவரை பின்பற்றவும் தொடங்கியிருக்கிறேன். அவருடைய மரணம் ஓவிய காலத்தின் ஒரு மாபெரும் இழப்பு.

No comments: